Aarohanam – Tamil film Review

ஆரோஹணம்

லக்ஷ்மி இராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு நல்ல படம். எப்படி இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஒரு பெண் இயக்குனரால் நன்றாகக் கையாளப்பட்டதோ அதே போல இவரும் ஒரு கஷ்டமான சப்ஜெக்டை திறமையாகக் கையாண்டுள்ளார். கௌரி ஷிண்டேக்கு முதல் படம்  ஹிட்! அதே போல லக்ஷ்மி இராமகிருஷ்ணனுக்கும் இந்த படம் ஒரு சிறந்த பாராட்டுதலை பெற்று தரும் 🙂

சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் நடிப்பு பிரமாதம். அவர் வயதுக்கு ஏற்ற பாத்திரம். அவர் குடித்தனம் இருக்கும் வீடு, அந்த ஏழ்மையான சூழலில் உதவிக்கரம் நீட்டும் வீட்டுக்கு சொந்தக்காரர்களான  பாய், பாயம்மா, இவர்களின் மனிதாபிமானம், விளையாட்டுத் தனமான் பிள்ளை, பொறுப்பான மகள், மனைவியை புரிந்துகொள்ளாமல் விட்டுப் போன கணவன், அவனின் மனிதநேயம் மிக்க இரண்டாம் மனைவி, ஒரு மனவளர்ச்சிக் குன்றிய எளியவன் – அனைத்துப் பாத்திரப் படைப்புகளும் கொஞ்சம் கூட மிகை இல்லாமலும் கதைக்கு பலமாகவும் அமைத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

மேல் தட்டு வாழ்க்கையையும் நன்கு சித்தரித்து உள்ளார். வழக்கு எண் 18/9 படத்தில் பணக்காரர்களை கெட்டவர்களாகவும் ஏழைகளை நல்லவர்களாகவும் காட்டியிருந்ததாக ஒரு குற்றச் சாட்டு இருந்தது. அது மாதிரி இல்லாமல் மேல் தட்டு மனிதராக இருந்தாலும் இயல்பாக ஒருவர் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வாரோ அவ்வாறே காட்டியிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.

Bi-polar Disorder என்ற நோயைப் பற்றி மூணு படத்தில் சிறிது பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் மிகவும் சிறந்த முறையில் கதையோடு விளக்கப் பட்டிருக்கிறது. ஏதோ documentary போல இல்லை. படத்தோடு ஒன்றி போய்விடுகிறோம்.  கடைசியில் மருத்துவர் விளக்குவதை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வைத்திருந்தால் நம் தமிழ் ஆடியன்சுக்கு இன்னும் சிறப்பாகப் புரிந்திருக்கும். கதையின் நோக்கமே மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது தானே!

பின்னணி இசையும் பாடல்களும் என்னை ஈர்க்கவில்லை. அதே போல ஜெயபிரகாஷ், கவிதாலயா கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் எதற்காக? அவசியமே இல்லை. Flashbackகாகவும் தற்போது நடைபெறும் நிகழ்சிகளாகவும் காட்டியிருந்தும் குழப்பம் இல்லாமல் நகர்கிறது திரைக்கதை. அதற்கு எடிட்டருக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் படத்தின் நேரம் தொண்ணூறு நிமிடங்கள் தான். சுருங்கச் சொல்லியிருப்பது அழகு 🙂

நோயைக் காட்டி பயங்காட்டாமல் நல்ல முறையில் திரைக்கதை அமைத்ததற்கு லக்ஷ்மி இராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள்! கன்னி முயற்சியில் சிக்சர் ஸ்கோர் பண்ணியுள்ளார், வாழ்த்துகள்!

மாற்றான் – திரை விமர்சனம் :-)

சூர்யா அற்புதமாக நடித்திருக்கிறார். ஒட்டி பிறந்த இரட்டையார் ஆதாலால் synchronised swimming மாதிரி synchronised dancing and synchronised fight movements 🙂 அற்புதமாகச் செய்திருக்கிறார். அவர் உழைப்பிற்கு ஒரு சபாஷ்! மிக மெல்லிய உணர்வு வேறுபாடுகளையும் துல்லியமாக முகத்தில் பிரதிபலிப்பதில் இருந்து அவர் நடிப்பில் அடுத்து பரிணாமத்திற்கு சென்றுள்ளார் என்று தெரிகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒருவரின் பிரிவின் போதும் தன் தந்தை எப்படிப் பட்டவர் என்று தெரிந்த பின் வரும் உணர்வுகளை மிகையில்லாமலும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். Especially, climaxல் அவர் தந்தையை இன்னும் நன்றாகப் புரிந்து கொண்ட பின் அவர் படும் வேதனை, அவமானம், துக்கம், கோபம் அனைத்தையும் ஒரு சேரக் காட்டுகிறார். சமீபத்தில் வந்த படங்களான, அயன், சிங்கம், ஏழாம் அறிவு இவற்றை விட இந்த படத்தில் அவர் நடிப்பு மெருகு ஏறியிருக்கிறது. இன்னும் நல்ல திரைக் கதைகளையும், இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்ல வேண்டும்!

காஜல் அகர்வால் பதுமை மாதிரி வந்து போகாமல் சிறிது நடித்தும் இருக்கிறார். சின்மயி டப்பிங் perfect! காஜலின் நடிப்பிற்கு மிகப்பெரிய பக்கபலம் சின்மயியின் குரல்.

விறுவிறுப்பாகத் தான் போகிறது கதை. கே.வி.ஆனந்த் திரைக் கதையை இன்னும் சீரமைத்து இருக்கலாம். அவருக்கு exotic locations போய் படம் பிடிக்க வேண்டும் என்று தீராத் தாகம் போலும். அதற்காகவே திரைக் கதையில் ரொம்ப twist எல்லாம் வைத்திருக்கிறார். அதில்லாமல் கதையில் நம்பகத்தன்மையை அதிகப் படுத்தும் படி யோசித்து திரைக் கதை அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும் பார்ப்பவர்களுக்கு!

கதைப் படி ஒட்டிப் பிறந்த இரண்டு சூர்யாக்களுக்கும் ஒரே ஒரு இதயம் தான். அப்படி பிறந்தவர்கள் சும்மா இடுப்பு கிட்ட துளியூண்டு ஒட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். படம் பிடிப்பதற்கு சௌகர்யமாக இருப்பதற்காக இந்த கொஞ்சம் ஓட்டல் பார்ப்பவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. கனவு டூயட் காட்சியில் இரண்டு சூர்யாக்களும் பிரிந்து நடனம் புரிவது இயக்குனர், ஒளிப்பதிவாளர், computer graphics technicianகளுக்கு நிம்மதியாக இருந்ததோ இல்லையோ எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

பாட்டுக்கள் சுத்த மோசம். ஐயோ அடுத்து பாட்டு வந்துவிடப் போகிறதே என்று சிறிது பயமாகக் கூட இருந்தது. பின்னணி இசையும் சுமார் ரகம்.

சற்றே புதுமையான கதைக் களம். அது வரவேற்கத்தக்கது. இணையத்தில் வந்த விமர்சனங்கள் போல படம் மோசம் என்று எனக்குத் தோன்றவில்லை. It is an entertaining film 🙂

கிருஷ்ணா…

தாய்மையை எதிர்பார்த்துக் கொண்டு.. (மாடல்)

நான் 1992ல் வணிகவியலில் முதுகலை பட்டத்தை சான் ஹோசே மாநிலப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெற்றிகரமாக பெற்றேன். அது ஒரு சாகசம் தான். நான் திரும்ப படிக்கப் போன போது என் மகளுக்கு நான்கு வயது, என் மகனுக்கு இரண்டு வயது. என் மாமியார் மாமனார் கூட இருந்தது எனக்கு பேருதவியாக இருந்தது. நான் மூன்று செமஸ்டர்களில் படித்துப் பட்டம் பெற்றேன் {4.0 GPA – தற்பெருமையில்லை :-)} அறைக்கதவை மூடிக் கொண்டு படிப்பேன். கதவை விடாமல் தட்டிக் கொண்டே இருப்பான் என் மகன். புத்தகங்களை படுக்கைக்கு அடியில் ஒளித்துவைத்து விட்டு என்னை படிக்க விடாமல் அவனுடன் விளையாட வரும்படி செய்வான். ஆனால் இந்தப் பதிவின் பார்வை நான் எப்படி படித்தேன் என்பதை பற்றி அல்ல. என்னுடைய நண்பன் கிருஷ்ணாவைப் பற்றியது.

அவனை நினைவு கூர்ந்து நான் எழுதும் ஒரு நினைவுப் பதிவு இது. கிருஷ்ணாவும் நான் படித்த சமயத்தில் அதே கல்லூரியில் அதே பட்டப்படிப்பை தான் படித்துக் கொண்டிருந்தான். என்னுடைய வகுப்புகள் மாலை ஆறிலிருந்து ஒன்பது வரை. கல்லூரி வகுப்பு அறைகள் அருகில் கார் நிறுத்தம் கிடையாது. சிறிது தொலைவில் தெருவில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். நான் முதல் செமஸ்டரில் இருக்கும் பொழுது கிருஷ்ணா கடைசி செமஸ்டரில் இருந்தான். நாங்கள் இருவரும் வேறு வேறு வகுப்புகள். ஆனால் வகுப்பு முடிந்ததும் என்னுடன் என் கார் நிறுத்தம் வரை நடந்து வந்து நான் காரை கிளப்பும் வரை இருந்து பின் அவன் பேருந்து பிடித்து செல்வான். என் மேல் அவ்வளவு அக்கறை. அந்த தெருக்களில் விளக்கு வெளிச்சம் ரொம்ப இருக்காது. எங்கள் வீடுகள் வேறு வேறு திசையில் இருந்தன. என் தோழியின் தம்பி அவன்.

அதிர்ந்து பேச மாட்டான். அவன் அக்கா ஸ்பான்சர் செய்து கிரீன் கார்டுடனே அவன் அமேரிக்கா வந்திருந்தான். படிப்பு முடிக்கும் தருவாயிலேயே நல்ல வேலை கிடைத்து பின் சென்னை சென்று அழகிய பெண்ணையும் மணம் முடித்து வந்தான். நாங்கள் சிங்கப்பூர் போவது என்று முடிவான பிறகு எங்களுடைய பர்னிச்சர்களை கிருஷ்ணாவும் அவன் மனைவியும் வாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது தான் அவர்கள் வீடு செட் அப் பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சிங்கப்பூர் கிளம்பும் பொழுது அவர்கள் மகிழ்ச்சியுடன் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிற்கும் நற்செய்தியை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர் 🙂

ஆறு மாதங்கள் கழித்து சான் ஹோசேயில் இருந்து தொலைபேசி மூலம் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. கிருஷ்ணா நீச்சல் குளத்தில் முழுகி இறந்துவிட்டான் என்பது தான் அது. இந்த சம்பவம் நடந்த அன்று மதியம் கணவனும் மனைவியும் நண்பர் ஒருவரின் சீமந்தத்திற்கு சென்று திரும்பியுள்ளனர். கிருஷ்ணா சீமந்தத்திலும் சரியாக சாப்பிடவில்லையாம். வீடு திரும்பியதும் ரொம்ப ஹெவியாக இருப்பதாக மனைவியிடம் சொல்லிவிட்டு அவர்கள் இருந்த குடியிருப்பின் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து விட்டு வருவதாகச் சொல்லி கீழே போயிருக்கிறான். நீச்சல் அடிப்பதால் உடல் சுறுசுறுப்பு அடையும் என்ற எண்ணத்தில் நீச்சல் அடிக்க போயிருக்கிறான். சில நிமிடங்களிலேயே அவன் உடல் நீச்சல் குளத்தில் மிதப்பதைப் பார்த்த வேறு ஒரு வீட்டுக்காரர் ஆம்புலன்சுக்கு போன் பண்ணியுள்ளார். மதிய வேளை, வார நாள், ஆதலால் நீச்சல் குளத்தில் அவன் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கே  யாரும் இல்லை. கடைசி நிமிடங்களில் என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. நன்றாக நீச்சல் அடிக்கக் கூடியவன் தான் அவன். அவன் மனைவிக்கு இன்னும் இரண்டே வாரங்களில் குழந்தை பிறக்கும் நிலைமையில் இந்த விபரீதம்!

அவன் இறப்பதற்கு ஒரு மாதம் முன் அவன் தன் மனைவியிடம் கம்பெனியில் இன்டர்னல் ஆடிட் செய்யும் பொழுது தன்னுடன் வேலை பார்ப்பவன் பணம் கையாடல் பண்ணியிருப்பது தெரிய வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறான். உடனே மேலதிகாரிக்கு தகவல் சொல்ல நினைத்த பொழுது, அந்த ஆள் இவனிடம் தான் எப்படியும் பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும், சிறிது கால அவகாசம் தரும்படி கெஞ்சியிருக்கிறான். ஒரு அமெரிக்கன் இந்த சூழ்நிலையில் இவ்வாறு நடந்துகொண்டிருப்பானா என்பது சந்தேகம் அனால் கிருஷ்ணா அவனுக்குக் கால அவகாசம் கொடுத்திருக்கிறான். மிகவும் இரக்க சுபாவம் அவனுக்கு. அனால் நாட்கள் சென்று கொண்டே இருந்ததே தவிர அவனிடம் இருந்து பணம் வரவில்லை. மேலதிகாரியிடம் சொல்லிவிடுவது என்று தீர்மானித்த அன்று அவன் மேலதிகாரி லீவு போட்டிருந்திருக்கிறார். அன்று இந்த ஆளும் அவன் அறைக்கு வந்து நீ மேலதிகாரியிடம் சொல்லிக்கொள், என்னால் பணம் புரட்ட முடியவில்லை, விளைவுகளை சந்திக்க நான் தயார் என்று கூறியிருக்கிறான். அறைக்கு வரும்பொழுதே ஒரு க்ளாசில் கோலா பானம் கிருஷ்ணாவிற்கு கொண்டு வந்திருக்கிறான். கிருஷ்ணா வேண்டாம் என்று மறுத்தும், நீ சாப்பிட்டால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று கூறியுள்ளான். அவன் அரபு நாட்டைச் சேர்ந்தவன். அவன் தொந்தரவு தாள முடியாமல் அதை குடித்திருக்கிறான். அந்த கோலா பானம் கேனிலோ அல்லது பாட்டிலிலோ அவன் கொண்டு வந்து கொடுக்கவில்லை, ஒரு க்ளாசில் கொட்டி எடுத்து வந்து கொடுத்திருக்கிறான். நண்பர் வீட்டு விசேஷத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அவனிடம் பேசிய உடனே வீட்டிற்கு கிளம்பியிருக்கிறான். வீடு வந்தவுடனே தன் மனைவியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறான். மேலும் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவன் உடல் நிலை சரியில்லாமலும் இருந்திருக்கிறது.

விசாரணைக்கு வந்த போலீசாரிடம் மனைவி இந்த அலுவலக விவரங்களை சொல்லியிருக்கிறார். சகோதரியும் அவன் நன்றாக நீச்சல் அடிக்கக் கூடியவன் ஒரு சின்ன நீச்சல் குளத்தில் முழுக வாய்ப்பில்லை என்றும் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் போஸ்ட்மார்டம் அறிக்கையில் உடலில் விஷம் இருந்ததற்கான அறிகுறி ஏதும் இல்லாததால் அது விபத்தால் நிகழ்ந்த மரணம் என்று போலீசார் கேசை மூடிவிட்டனர்.

கிருஷ்ணாவின் மனைவியின் சோக நிலையை நீங்கள் புரிந்து கொண்டிருக்க முடியும். அவளுக்கு வாழவே விருப்பமில்லை. அவள் இடுப்பு வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன் அவளை நானும் என் கணவரும் சந்தித்து ஆறுதல் சொன்னோம். பிரசவ வேளையின் போது அவள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை. உடலில் திராணியே இல்லை. அவள் நாத்தனாரும் இன்னொரு நெருங்கிய தோழியும் தான் பிரசவ நேரத்தில் கூடவே இருந்து தைரியம் அளித்து சுகப் பிரசவத்திற்கு வழி செய்தார்கள். கிருஷ்ணாவின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. (அமெரிக்காவில் ஸ்கான் பண்ணும் பொழுதே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவில்லை.) பெண் பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று  குழந்தைக்கு கிருஷ்ணா தேர்ந்து எடுத்து வைத்த பெயரையே அவள் வைத்தாள்.

மருமகனின் காரியத்துக்கு வந்த கிருஷ்ணாவின் மனைவியின் பெற்றோர்களில், தந்தை ஏதோ அவசர வேலை நிமித்தமாக உடனே கிளம்பிவிட்டார். தாய் மட்டும் மகளுக்கு துணையாக தங்கிவிட்டார். சென்னை திரும்பிய மாமனார் அவர் நண்பரின் வற்புறுத்தலின் பேரில் உடனே வேலூர் சென்று அங்கு ஆவியுடன் பேசும் ஒருவரை சந்தித்து இருக்கிறார். அவர் மகளுக்கு நேர்ந்த பேரிழப்பு அவரை மிகவும் பாதித்து இருந்தது. அதைவிட அவர் மருமகனின் மரணத்தில் அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அதனால் அவர் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். கிருஷ்ணாவின் ஆவியே அந்த நபரின் உடலில் வந்ததாக கிருஷ்ணாவின் மாமனார் என்னிடம் கூறினார். கிருஷ்ணாவின் ஆவி தனக்கு நீச்சல் குளத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின் மரணம் சம்பவித்ததாகவும் கூறினானாம். மேலும் கண்டிப்பாக அவனுடன் வேலை செய்தவன் கொடுத்த பானத்தில் எதொ மருந்து கலந்திருக்க வேண்டும். அதை குடித்த பிறகு தான், அவன் நிலை கொள்ளாமல் தவித்ததாகவும் ஆவி வடிவில் இருந்த கிருஷ்ணா கூறினானாம். கிருஷ்ணாவின் மாமனார் வேலூர் சென்றபோது அவர் மகளுக்கு குழந்தை பிறந்திருக்கவில்லை. ஆனால் கிருஷ்ணாவின் ஆவி தனக்கு மகள் தான் பிறப்பாள் என்றும் சொல்லி, தன் மனைவிக்கு மறு கல்யாணம் செய்து வைக்கும்படி மாமனாரிடம் கேட்டுக் கொண்டானாம்.

இந்த தகவல் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் மகளுக்கு அவர் தெரியப் படுத்தினார். ஆனால் அங்கு இருந்த அவள் உறவினர்களும் நண்பர்களும் போலீசிடம் இந்த மாதிரி தகவல்களைக் கொடுத்தால் எந்த பயனும் இருக்காது என்று சொல்லி அவளை மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்க விடாமல் தடுத்துவிட்டனர்.

இந்தியா திரும்பி வந்து சில வருடங்களில் மறுமணம் புரிந்து கொண்டாள். இன்றும் தன் முதல் கணவன் மரணம் இயற்கையானதல்ல என்று தான் எண்ணுகிறாள்.

கிருஷ்ணாவை நினைக்கும் போதெல்லாம் அவனின் சிரித்த முகமும் நல்ல உள்ளமும் தான் என் நினைவுக்கு வருகிறது. விதி வலியதுதானோ?

Life throws a curve ball at you

 

An expectant mother (model)

I graduated from San Jose State University with a MBA degree in 1991. It was an adventure by itself. My daughter was four and my son two when I went back to school. Luckily my in laws stayed with me through out the duration of my studies. I finished in three semesters with a 4.0 GPA (not bragging please) My son would bang on the door and would create a real ruckus when I tried to study or do my assignments. He would hide my books under the bed so that I would spend time with him and not with the books, but that is not the point of this post.

This post is actually a eulogy to a dear friend of mine named Krishna. My classes were in the evening between six and nine. I used to park my car in one of the side streets as getting a parking spot in that part of down town area was very tough. When I was in the first semester Krishna was in his last. He was my friend’s brother. We were in different classes, but after class he would accompany me to my car, wait for me to start the car before he left as he was always concerned about my safety since that part of the down town was not well lit and not a safe neighbourhood either.

He was a very soft spoken person and he had come to US through the sponsorship of his sister, so already had the coveted green card. Even before he finished his degree he found a good job and very soon got married to a lovely girl from Chennai. When we moved to Singapore he took most of our furniture as he was newly set upping his home. His wife was a very sweet person. When we left for Singapore they were expecting their first child.

Six months later we get a phone call from San Jose informing us that Krishna is no more. He had drowned in his apartment swimming pool. On that day both of them had attended the Seemantham of one of their fiends. He had picked up his wife from office during lunch time to attend the function. After lunch when they returned home he complained of heaviness and told his wife that may be a swim would help and went down to the pool. He was found floating in the pool minutes later by somebody. Being a working day and late afternoon there was no body else in the pool when he went for a swim. So there was no way of knowing what happened to him in his last minutes. He was a fairly good swimmer. His wife was due in two weeks. Post mortem revealed that he had died due to drowning.

One month prior to his death he had told his wife that when he was doing the internal audit in his company he had found out that his colleague had embezzled money. He wanted to inform his superiors but his colleague was begging him to give him some time to make good the theft. He was a Middle Eastern guy. I do not know how an American would have acted during such a situation. But Krishna being the compassionate type and may be in India we tend to bend the rules a little to help others, probably felt that it was okay to wait for a few days before informing his superiors.

No money was coming from that fellow and the day he was going to inform his boss about it was the day of the Seemantham. Unfortunately his boss was on leave that particular day and he could not have the meeting with him. The same morning this fellow came to his desk and offered him coke in a glass, not a can, not a bottle but a glass which he brought from his cubicle. Krishna was in no mood to drink anything offered by him. But his colleague had told him that he was really sorry for what he had put Krishna through and was ready to face the consequences.He said that he did not object to him informing his boss about the embezzlement. He had apparently told him that he would be happy if he drank what he offered and so Krishna did and left office a little before lunch time. Once he reached home he had told his wife that he was not feeling very well. He also told her about the soft drink he had in a glass offered by his colleague.

So during police investigation the wife told all this to the investigating officer. His sister also vouched for his swimming abilities and felt that no way he could have drowned in an apartment swimming pool. But the post mortem results did not reveal any kind of poison in his body and the case was closed shut.

You can imagine the plight of the wife. She had no will to live even. She was unconsolable. My husband and I visited her in San Jose just before she went into labour. Her sister in law and another dear friend were her coaches and begged her to co operate and made her have a normal delivery. Krishna and his wife did not want to know the sex of the child before the baby was born though there is an option in the US to know before hand. She was blessed with a baby girl and was given the name chosen by her husband.

Krishna’s mother in law stayed with her daughter after attending the funeral but her father had to go back immediately to India. On reaching Chennai he went to Vellore to meet a “medium”. He was quite naturally very upset about what happened to his daughter. But he was more upset about the possibility of  foul play in his son in law’s death and the irreverent attitude of the local police department in the US regarding their doubts. So at the behest of one of his friends he went to meet this person who was able to talk to the spirits who had died of unnatural causes. I believe Krishna’s spirit came on to that man and started telling his father in law about what happened prior to his death. He told him that he felt very dizzy in the pool and swooned and eventually drowned. The spirit told him that definitely he was drugged by his colleague. It must have been some kind of slow reacting poison. It also told him that they would be getting a girl baby (the child was not born yet) and also requested his father in law to get his wife remarried.

The father contacted his daughter in the US and told her about this experience. Her friends and relatives dissuaded her from giving this kind of information to the police which they would not in any case believe and would in no any way help in the investigation.

She came back to India after a year and after a few years got remarried. She has a good family life. But to this day she believes that her first husband did not die of natural causes.

Review of English Vinglish

Sridevias Shashi in English Vinglish

இங்க்லீஷ் விங்க்ளிஷ் படத்தைப் பார்த்து விட்டு வந்து உடனே இந்தப் பதிவை எழுதுகிறேன். ஸ்ரீதேவி – ஆஹா, எங்கிருந்தீர்கள் இவ்வளவு வருடங்களாக? மூன்றாம் பிறையின் மகோன்னத நடிப்பை இந்தப் படத்தில் மீண்டும் காணலாம். இது முழுக்க முழுக்கக் கதாநாயகிக்கான படம். வெளுத்து வாங்கியிருக்கிறார் ஸ்ரீதேவி. இந்த மாதிரி ஒரு பாத்திரமும், வலுவான கதையும், திரைக்கதையும் அமைந்தது ஸ்ரீதேவியின் அதிர்ஷ்டமே! I applaud Gauri shinde for her directorial achievement in her debut film! அவர் தாயின் கதையைத் தழுவி எடுத்ததனால் நம்பகத்தன்மை அதிகம் உள்ளது. What a sensitive portrayal by Sridevi and a sensitive handling of the subject by the director. Hats off to both of them!

எனக்கு கதை தெரிந்தால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து விடும். அதனால் நான் கதையை இங்கே கோடிட்டு தான் காட்டப் போகிறேன். ஸ்ரீதேவி இல்லத்தரசி, திறமையான பெண்மணி. ஆனால் ஆங்கிலம் தெரியாததால் குடும்பத்தினரால் ஏளனப் படித்தப் படுகிறார். அவருக்கு தனியாக அமேரிக்கா செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. அங்கு சென்று அங்கு உள்ள வாய்ப்புகளைப் பயன் படுத்தி எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்கிறார் என்பதே கதை. ஒரு இல்லத்தரசிக்குக் கணவனிடம் உள்ள எதிர்பார்ப்புகள், அவனின் உதாசீனம் தரும் மனக் கசப்பு, அதனால் வரும் தாழ்வு மனப்பான்மை, அதை சீர்படுத்த அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், தன்னம்பிக்கை மீண்டும் வர மிகத் தேவையானது என்ன, இவை அனைத்தையும் கோர்வையாக குறையொன்றும் இல்லாமல் தந்திருப்பது இயக்குனரின் திறமையையும் ஸ்ரீதேவியின் பங்களிப்பையும் காட்டுகிறது. திரையில் ஸ்ரீதேவி இல்லை, சஷிதான் உள்ளார்.

அஜித் கெஸ்ட் ரோலில் வருகிறார். என்ட்ரி ஆகும்போதே திரை அரங்கில் விசிலும் கைதட்டலும். சிறிய ரோலாக இருந்தாலும் அற்புதமாகப் பண்ணியுள்ளார்.  அவர் இமேஜுக்கு ஏத்த ரோல், ஆதலால் நல்ல fit 🙂

எதுவுமே மிகை இல்லாமல் இருக்கிறது. No melodrama. அமெரிக்க வாழ்க்கை முறை, அங்கு ஸ்ரீதேவி செல்லும் வகுப்புகள், அனைத்தும் இயல்பாக உள்ளது. ஸ்ரீதேவி பல இடங்களில் பிற மொழியாளர்களிடம் தமிழிலும், அவர்களும் பிற மொழியில் ஸ்ரீதேவியிடம் உரையாடியும் எண்ணங்களை உணர்ந்து கொள்வது போல காட்டியிருப்பது,only shows that  language is no barrier to emotions which is common to all.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இயக்குனர் ஒரு பெண்ணாக இருப்பது தான். பெண்ணின் கோணத்தில் இருந்து சிறப்பாக எடுத்துள்ளார். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணம் நானும் ஒரு பெண்.

ரசூல் பூக்குட்டி sound mixing. ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. உடை அலங்காரம் அருமை. ஸ்ரீதேவியின் புடவை செலக்ஷன் அவருக்கு அவ்வளவு அம்சமாக உள்ளது.

குறைகள் என்று பார்த்தால் இந்தி டப்பிங் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தித் திருமணம், இந்தி நடிகர்கள். பாடல்கள் சுமார் ரகம், ஆயினும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

அனால் படம் ஒரு கவிதை. It makes a big impact on you when you leave the theatre.