அதாகப்பட்டது, கதை வராஹ அவதாரத்தில் இருந்து தொடங்குகிறது. திருமால் வராஹ அவதரம் எடுத்து பூமாதேவியை பாதாள லோகத்தில் இருந்து மீட்டு பின் தன் இருப்பிடமாக திருமலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கேயே வசிக்கலானார். அதனால் அந்த இடத்திற்கு வராஹ ஷேத்ரம் என்ற பெயரும் வந்தது.
நைமிசாரண்யத்தில் முனிகளும் ரிஷிகளும் சூத பௌராணிகரிடம் எந்த ஸ்தலம் மஹா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது என்று கேட்டனர். அதற்கு அவர் திருமலையை சுட்டிக் காட்டினார். அந்த மலைக்குக் கேட்டதைக் கொடுக்கும் பலமும் வந்து வணங்குவோர்க்கு அனைத்துச் செல்வங்களையும் தரும் சக்தியும் இருப்பதை எடுத்துரைத்தார். ஒரு யுகம் அழிந்து மறு யுகம் பிறக்க வேண்டிய வேளை வந்தது. மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அதில் பூமியும் கரைந்து பாதாள லோகத்துக்குச் சென்று விட்டது. அதனால் மாஹா விஷ்னு வெள்ளை பன்றி ரூபத்தில் பாதாள லோகத்திற்குச் சென்று ஹிரண்யாக்ஷன் என்ற கொடிய அரக்கனுடன் போரிட்டு பூமியை மீட்டு வந்தார். புது யுகம் பிறந்தது. இந்த காலம் ஷ்வேத வராஹ கல்பம்!
பூமியை ஸ்திரப்படுத்திய பின்னர் மஹாவிஷ்ணு (பூவராஹர்) கருடனை அழைத்து, வைகுண்டத்தில் இருந்து க்ரிடாசலாவையும் தேவர்களையும், விஷ்வக்சேனரையும் கொண்டுவரச் செய்தார். க்ரிடாசலா ஒரு தேவ மலை. தங்கமும், வைரமும், வைடூரியமும் நிறைந்தது. வானளாவிய மரங்கள், நறுமணம் கமழ்கின்ற மலர்கள் நிறைந்த பூங்காவனம் அது. பறவைகள் இனிய கானங்களை எழுப்பிய வண்ணம் இருக்கும் ஒரு ஆனந்த மலை அது! கின்னரர்களும் பாட்டு இசைத்து சலசலத்து ஓடும் நீரோடைகளுக்கு இணையாக இனிய ஒலியை எழுப்பிய வண்ணம் இருப்பர். மொத்ததில் ஹரியின் உறைவிடமாக இருக்க முழுத் தகுதி நிறைந்த வாசஸ்தலம் அந்த நாராயண மலை! அந்த மலையை வராஹர் எந்த புனிதமான இடத்தில் வைக்க வேண்டும் என்று கருடனுக்கு உத்தரவு இட்டார். நீண்ட மலையானது ஆதிசேஷனை ஒத்து இருந்தது. அங்கு அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்ந்து வந்தனர். வருவோர்க்கு மோக்ஷம் அளிக்கும் இடமாக அது ஹரியின் அருளால் மாறியது. அந்த மலையில் ஸ்வேத வராஹராக மஹாவிஷ்ணு வாசம் செய்ய ஆரம்பித்தார். பக்கத்திலேயே ஸ்வாமிபுஷ்கரணி என்ற புனித குளம் உதயமாயிற்று. அதற்கு தெற்கு புரத்தில் தான் பின்னாளில் சங்கு சக்கரதாரியாக ஶ்ரீனிவாச பெருமாள் திருமகளுடன் வீற்றிருக்கப் போகிறார். இந்த மலைக்குப் பல பெயர்கள் உள்ளன. அதில் சில, சிந்தாமணி, நாராயணாத்ரி, சிம்மாசலம், சேஷாசலம் ஆகியவை.
இன்னொரு கதையும் உள்ளது. ஒரு சமயம் விஷ்ணு நாரதரிடம் வைகுண்டத்தை விட்டு சில காலம் வேறு இடம் தங்க வேண்டும், நல்ல இடமாகச் சொல் என்றாராம். நாரதர் சொன்ன இடம் இதே சேஷாசலம் இருக்கும் இடம் தான். ஆனால் அது எப்படி உருவானது என்பதற்கு ஒரு உப கதை உள்ளது. ஒரு சமயம் வாயுவும் ஆதிசேஷனும் யார் பலசாலி என்று சண்டை இட்டனர். சேஷன் மேரு மலையை தன் பாம்பு உடலால் நன்றாகச் சுற்றிக் கொண்டு வாயுவை அழைத்து நகர்த்த முடியுமா பார் என்று சவால் விட்டார். வாயு எவ்வளவு முயன்றும் மலையை நகர்த்த முடியவில்லை. அப்பொழுது ஆதிசேஷன் மூச்சு விட வாயைத் திறந்த பொழுது வாயு அவருக்குள் புகுந்து மலையின் ஒரு பகுதியை ஊதித் தள்ள ஆரம்பித்தார். பல யோஜனை தூரங்கள் பறந்து சென்ற பின் மேரு வாயுவிடம் அந்த மலையை அங்கேயே விட்டுவிடுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டது. ஆதிசேஷனுக்கு அவமனமாகப் போய் விட்டது. தன் தோல்வியை எண்ணி வெட்கி விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தார். மஹாவிஷ்ணுவும் அவர் முன் தோன்றி ஒரு வரம் அளித்தார். ஆதிசேஷன் தான் ஒரு மலையாக மாறி விஷ்னு அவர் தலை மெல் வாசம் செய்யவேண்டும் என்றும் அந்த மலைக்கு சேஷாசலம் என்றும் பெயரிடப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்னுமொரு கதை உள்ளது. ஒரு முறை நிறைய முனிவர்கள் சேர்ந்து கங்கைக் கரையில் ஒரு யாகம் நடத்தினர். அங்கு வந்த நாரதர் அந்த யாகம் எந்த பகவானுக்காக நடத்தப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பினார். அதுவரை அதைப் பற்றி யோசிக்காத முனிவர்கள் அந்த பொறுப்பை ப்ருகு முனிவரிடம் ஒப்படைத்தனர். அவரும் முதலில் சத்திய லோகம் சென்று ப்ரம்மனை தரிசித்தார். அவரோ கலைவாணியுடன் பேசிக் கொண்டு இவரை கவனிக்கவில்லை. அடுத்து கைலாசம் சென்றார். அன்கும் சிவனார் சக்தியோடு ஐக்கியமாகி இவரை கண்டுக் கொள்ளவில்லை. பிறகு ப்ருகு வைகுண்டம் சென்றார். அங்கேயும் இதே கதை தான். திருமால் திருமகளுடன் ஆனந்தமாக இருந்தார். கோபம் வந்து ப்ருகு முனிவர் திருமாலின் மார்பில் காலால் எட்டி உதைத்தார். உடனே எழுந்த மாஹா விஷ்ணு ப்ருகு முனியின் பாதங்களைப் பற்றி என்னை உதைத்ததில் உங்கள் கால் வலித்திருக்குமே என்று பிடித்து விட்டார். அதனால் முனிவர் திரும்பி சென்று யாகத்தின் பிராசதத்தை விஷ்ணுவிற்கே அளிக்கவேனண்டும் என்று எடுத்துரைத்தார். ஆனால் மஹாலக்ஷ்மி தன் வாசஸ்தலமான பெருமாளின் இதயத்தை ப்ருகு முனிவர் உதைத்து விட்டதால் கோபம் கொண்டு பூலோகம் வந்து கோலாபூரில் குடிகொண்டார். தனிமையில் வாடிய திருமால் அங்கும் இங்கும் திரிந்து பின் சேஷாசலத்தை அடைந்தார். அந்த இடம் பிடித்துப் போய் ஸ்வாமி புஷ்கரணியின் கரையில் ஒரு எறும்புப் புற்றில் வசிக்கத் தொடங்கினார்.
அவரின் வராஹ தோற்றம் அதி பயங்கரமாக இருந்தது. தேவர்களும் முனிவர்களும் பிரார்த்தித்துக் கொண்டதன் பேரில் வராஹ பெருமான் அழகிய ரூபத்தை எடுத்துக் கொள்ள இசைந்தார். ஶ்ரீதேவி பூதேவியுடன் அங்கு வசிக்க வாக்குக் கொடுத்தார். இந்த மலைக்குப் பல கல்யாண குனங்கள் உண்டு. விரஜா நதியைப் போல கங்கையின் பிறப்பிடமான இந்த மலைக்குப் பாவங்களை போக்கும் வல்லமை உள்ளது. பார்ப்பதற்கு சாதாரண மலையைப் போல இருந்தாலும் பக்தர்களின் பக்தி இந்த மலையில் புனிதமடைகிறது. பக்தியின் சக்தி பன்மடங்காகப் பெருகி கேட்ட வரத்தை அடையச் செய்கிறது. அதே போல ஸ்வாமிபுஷ்கரணியில் நீராடினாலும் பாவங்கள் தொலைகின்றன.
வெங்கடேச பெருமாள் பல லீலைகளை மலையில் நிகழ்த்தி இருக்கிறார். இராமாவதாரத்தின் போது சீதையுடன் இங்கு உலவியதாக இதிஹாச புராணங்கள் கூறுகின்றன. அதனால் அந்தப் புண்ணிய ஷேத்திரத்தில் யாகம் நடத்த சில முனிவர்கள் முடிவு செய்து யாகம் நிகழ்த்த, அந்த யாகத்தில் வழஙகப்பட்டதை பெற்றுகொள்ள மிக மிக சௌமிய ரூபத்தில் மஹாவிஷ்ணு திருமகளுடன் எழுந்தருளினார். அதே போல வேங்கடேசனாக இன்னொரு சமயமும் ஒரு வயோதிகருக்கு உதவ திருமலையில் அவ்வாறே காட்சி தந்தார். சோம வம்சத்தைச் சேர்ந்த சங்கண்ணா என்ற அரசன் நல்லபடியாக அரச பரிபாலனம் செய்து கொண்டு இருந்தபோது எதிரிகள் சூழ்ச்சியால் நாட்டை இழந்தான். தன் குடும்பத்துடன் காய் கனிகளை உண்டு காட்டில் மறைந்து இருக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. மிகவும் மன வருத்தத்துடன் ஓர் இரவு உறங்கும் பொழுது அரசனுக்கு அசரீரியாக கனவில் ஒரு குரல் கேட்டது. வடக்கே இரண்டரை மைல் தொலைவில் வெங்கடாச்சல மலை உள்ளது, அதில் ஸ்வாமிபுஷ்கரணி உள்ளது. அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. அதன் உள்ளே திருமால் வீற்றிருக்கிறார். அங்கு சென்று குடிசை அமைத்துத் தினமும் புஷ்கரணியில் நீராடி திருமாலை தியானித்தால் இழந்த நாடு திரும்பக் கிடைக்கும் என்று அந்த அசரீரிக் குரல் கூறிற்று. அரசனும் அதே போல செய்ய அவருக்கு வெங்கடேசப் பெருமாள் ஸ்வாமி புஷ்கரணியின் மேலே, தங்க விமானத்தில் ஜகஜ்ஜோதியாக சங்கு சக்கர கதையுடனும் மஹாலக்ஷ்மியுடனும் காட்சி தந்தார். வேண்டிய வரத்தை அளித்து, அரசன் இழந்த நாட்டை திரும்ப கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கதைப்படி சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட பிறகு, இராமனும் இலக்குவனும் வானரப் படைகளுடன் இங்குத் தங்கி புஷ்கரணியில் நீராடி பிரார்த்தனை செய்து பின் இலங்கை சென்று வெற்றி வாகை சூடியதாகவும் சொல்லப்படுகிறது.
ப்ரம்மாண்ட புராணப்படி :-
சோழ தேசத்தில் கோபினாதர் என்ற ஒரு கிருஷ்ண பக்தர் இருந்தார். அவர் இறைவனிடம் முக்தி வேண்டி கேட்டுக் கொண்டதன் பேரில் கிருஷ்ண பரமாத்மா அவரை சேஷாச்சல மலைக்குச் சென்று ஶ்ரீனிவாசனைப் பிரார்த்திக்கும்படி கூறினார். அவருக்குத் துணையாக ரங்கதாசர் என்பவரும் வருவார் என்றும் கூறினார். அதே போல் அவர்கள் இருவரும் மலை மேல் சென்று எறும்புப் புற்றில் இருந்து ஶ்ரீனிவாசப் பெருமாளின் விக்கிரகத்தை எடுத்து ஒரு மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். ஒரு முறை லக்ஷ்மி தேவி பிரம்மாவை பசுவாகவும் சிவனை கன்றுக் குட்டியாகவும் மாற்றி சோழ நாட்டு அரசனிடம் விற்றுவிட்டார். அந்த மாடு சேஷாச்சல மலையின் மீது தினம் சென்று அந்த எறும்புப் புற்றின் மீது பால் சொரிந்து விட்டு வீடு திரும்பியதால் பால் கிடைக்காத பால்காரன் அரசியிடம் திட்டு வாங்கினான். என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டைப் பின் தொடர்ந்த பால்காரன் மாடு ஒரு புற்றின் மீது பாலை சொரிவதைக் கண்டு கோபமுற்று ஒரு கோடாலியை எடுத்து மாட்டை வெட்டப் போனான். அப்பொழுது பெருமாள் புற்றில் இருந்து வெளிவந்து வெட்டை அவர் வாங்கிக் கொண்டதில் அவர் தலையில் இருந்து இரத்தம் வடிந்தது. இதைக் கண்ணுற்ற பால்காரன் அந்த இடத்திலேயே உயிர் நீத்தான். பின் அந்தப் பசு கீழே சென்று அரசனை மலைக்கு அழைத்து வந்தது. அரசன் மிகவும் வருத்தமுற்றான். ஶ்ரீனிவாசர் அரசினடம் பின்னாளில் ஆகாசராஜா அவரின் மகள் பத்மாவதியை எனக்கு மணமுடித்துக் கொடுப்பார், அப்பொழுது அவர் ஒரு கிரிடம் பரிசளிப்பார். அதை பிரதி வெள்ளிக்கிழமையும் நான் அணிவேன். அப்பொழுது எனக்கு வலி தெரியாது என்று கூறினார்.
ஶ்ரீனிவாசக் கல்யாணம் :-
ஒரு முறை ஶ்ரீனிவாசர் காட்டுக்கு வேட்டையாடப் போனார். ஒரு யானையைத் துரத்தியபடி வெகு தூரம் பயணப்பட்டு ஒரு நந்தவனத்தை அடைந்தார். அங்கு ஆகாசராஜனின் புதல்வி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஆகாசராஜன் தொண்டைமானின் சகோதரன், சந்திர வம்சத்தினன். ஒரு முறை நிலத்தை உழும்போது ஒரு தாமரையில் மறைந்திருந்த குழந்தையைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தைக்கு பத்மாவதி எண்று பெயரிட்டு வள்ர்த்து வந்தான். பிறகு அவனுக்கு வசுதேவா என்ற மகனும் பிறந்தான். ஶ்ரீனிவாசர் பத்மாவதியைக் கண்டவுடன் மையல் கொண்டு அவளை மனமுடிக்க அவளிடம் விருப்பத்தைத் தெரிவித்தார். வசுதேவரின் மகனான கிருஷ்ணன் தான் தான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால் அவர்கள் அவரை விரட்டியடித்துவிட்டனர். அவர் மிகுந்த சோகத்துடன் எறும்புப் புற்றுக்கு வந்து அமர்ந்து விட்டார். அவரை கவனித்து வந்த வகுளா தேவி அவரின் வருத்தத்தைக் கண்டு அவரே அரசனிடம் சென்று பேச முடிவெடுத்தார். அதற்கு முன்பே ஶ்ரீனிவாசர் ஒரு குறத்தியைப் போல வேடமிட்டு அரசி தரணியைப் பார்த்து அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார். அந்த சமயம் வகுளா தேவியும் அங்குச் செல்ல எல்லாம் இனிதே முடிந்தது. ஶ்ரீனிவாசருக்கும் பத்மாவதித் தாயாருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிரைவேறியது.
தொண்டைமான் தான் இப்பொழுது இருக்கும் கோவிலை நிறுவினார். அவர் தான் முன் ஜென்மத்தில் ரங்கதாசராகப் பிறந்தவர். இந்த அழகிய கோவிலில் திருப்தியுடன் வசிக்கிறார் ஶ்ரீனிவாசர். ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தொல்காப்பியத்தில் இத் திருமலையைப் பற்றி “வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லகம்” என்று குறிப்பும் உள்ளது. சிலப்பிதிகாரத்தில் “நெடியோன் குன்றம்” என்று திருமலையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த இப்பாடலுடன் இந்தக் கட்டுரையை நிறைவுக்குக் கொண்டு வருகிறேன்.
வேங்கடமே விண்ணோர் தொழுவதும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினை நொய்தீர்ப்பதுவும் —வேங்கடமே
தானவரை வீழத் தானாழிப் படைத் தொட்டு
வானவரைக் காப்பான் மலை.
Reference: The tirumala Temple by Dr N.Ramesan
Apr 24, 2013 @ 19:46:24
Interesting. On one hand, we have a story, that says God is everywhere and so, the devotee need not worry in which direction his feet lay. We also have sthala puraNams.
The flow and yr laguage are good.
Akaashath padhitam thoyam
Yatha gachathi sagaram –
Sarvadeva namaskaram
Sri vasudevam prathi gachathi.
Apr 24, 2013 @ 19:47:58
The above was from me, PVR
Apr 24, 2013 @ 20:44:27
Thank you :-))
Apr 25, 2013 @ 01:08:20
Interesting..Have only heard the Kuberan story..All the stories here are new to me 🙂
Apr 25, 2013 @ 02:22:49
Interesting ………….. :))))
Apr 25, 2013 @ 03:26:55
ஸ்ரீநிவாசர், திருமலை மற்றும் பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். .
ஒரு வேளை நான் இது போல் எதாவது முயற்சி செய்தால், எப்படி எழுதலாம் என்றும் கற்றுக்கொண்டேன் – சிக்கனமான தொகுப்பு, அழகு நனட, சாதாரணமான வார்த்தைகள்.
மிக்க நன்றி மா
Apr 25, 2013 @ 03:35:19
Thanks for all the versions ma. Really an interesting read. It’s been like a decade I read an article on thirupppathi.
Apr 25, 2013 @ 03:40:52
நன்றி :-))
Apr 25, 2013 @ 12:04:20
Yes, it is :-)) It has! The book is a store house of information.
Apr 25, 2013 @ 12:11:35
அமெரிக்காவில் ஒரு கதா காலாட்சேபம்!!!! நல்லா இருக்குங்க :))))
Apr 25, 2013 @ 12:13:31
Thanks :-))
Apr 25, 2013 @ 12:36:44
Got very good leads to tell stories to Janani. Superb writing amma. 🙂
Apr 25, 2013 @ 12:51:24
நன்றி :-))
Apr 25, 2013 @ 12:50:54
KRS, I am so happy that my 4 Lines on Lord Venkatesa has brought out 400 lines from you. நீங்கள் பின்னூட்டம் இட வேண்டும் என்பதற்காகவே ஶ்ரீனிவாசப் பெருமாள் என்னை இந்தப் பதிவை எழுத வைத்தார் போலும். இவ்வளவு விவரங்கள் தந்து என் பதிவைப் பெருமை படுத்தியதற்கு நன்றி. நீங்கள் வாழ்க பல்லாண்டு!
Apr 25, 2013 @ 13:07:49
forgot to tell In the flow;
this poNNu is aaNdaaL
& above lines from nachiyar tirumozhi
Apr 25, 2013 @ 13:49:36
Of course! You ans AaNdaaL are inseparable! How can you miss talking about her? 😉
Apr 25, 2013 @ 17:58:27
Yes, KRS’s comment contains so much information. Thank you for reading 🙂
Apr 26, 2013 @ 00:23:51
A photograph of Tirumanjanam of Balaji showing Him as a four armed with Changu Chakkram http://s2.hubimg.com/u/2111129_f520.jpg !
Apr 26, 2013 @ 16:04:35
இல்லம்மா; Sorry, இது Bangalore Iskcon கோயில் சிலை:)
திருமலை எம்பெருமான் இப்பிடி இருக்க மாட்டாரு;
திருப்பதிப் பெருமாள் கையில் = சங்கு-சக்கரங்கள், கற்சிலையோடு கிடையாது;
மற்ற நகைகள் போல், மாட்டி எடுக்கும் வகையைச் சேர்ந்தது;
—-
அது எந்தச் சமயமானாலும், “உண்மையே” முக்கியம்; சமணமோ, சைவமோ, வைணவமோ எதுவானாலும்…
= என் “விசுவாசம்” தமிழுக்கே! என் காதல் முருகனுக்குக் கூட இல்லை;
= என் “விசுவாசம்” தமிழுக்கே! தாய்-தந்தையரான பெருமாளுக்கும் இல்லை;
வாழ்க்கையில் நட்புக்கு விசுவாசம்;
ஆனா, எழுத்தில் = தமிழுக்கு மட்டுமே என் விசுவாசம்; Sorry for this naked truth!
—-
Apr 26, 2013 @ 16:11:30
That is what I thought. I have had the baakyam to see Balaji’s
Thirumanjanam. He was with two hands only.
Apr 26, 2013 @ 16:19:57
திருவரங்கம் –ன்னு Google Image செய்து பாருங்கள்; அரங்கன் கையில் சங்கு சக்கரங்கள் இருக்காது;
But அறி துயில்; அதனால் “வம்பு” கிளம்பவில்லை:)
இவ்வளவு ஏன்?
திருச்செந்தூர் போன்ற பழமை வாய்ந்த முருகன் கோயில்களில் கூட, முருகன் கையில் வேல் இருக்காது;
வேல், சும்மா தோளில் சார்த்தி வைப்பாங்க; கற்சிலையோடு இருக்காது;
அதே போல் தான் திருமலை – திருப்பதியும்;
பண்டைத் தமிழ் மக்கள், தங்கள் இறை வடிவங்களில் ஆயுதம் வைக்கவில்லை;
நடுகல் படைகளிலும் = ஆயுதங்கள் தனியே தான் குத்தி வைப்பதுண்டு
—-
சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள் குறிப்பிடுவதும் இதுவே;
“பகை அணங்கு ஆழியும்/ பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் **கையில் ஏந்தி**”
*நான்கு கரம் தான் = அது உண்மை
*தோளில் சார்த்தி இல்லை! = அதுவும் உண்மை
*ஆனால் கற்சிலையோடு கிடையாது;
*மற்ற நகைகள் போல், மாட்டி எடுக்கும் வகையைச் சேர்ந்தது;
It will be something like this = http://2.bp.blogspot.com/_9vbFLWt4Si4/S1P5faGHdgI/AAAAAAAAAGk/ibsYZmpzX5o/s400/1.bmp%5B2%5D.jpg
minority சமயங்களின் மரபியல் பெருமை பிடிக்காத சில majority மக்கள்…
சில சமயச் சழக்கர்கள்…
திருமலையில் “வம்பு” கிளப்பிய போது…
இராமானுசர், “இந்த நகைகளை இனி எடுக்கவே வேண்டாம்; அபிடேகம் செய்யும் போது கூட எடுக்க வேணாம்; சிலையோடவே நிரந்தரமாக இருந்து விடட்டும்” என்று கோயில்-ஒழுகிலே சாசனம் செய்தார்
(மற்றபடி, பாம்பாக மாறி வேண்டிக்கிட்டார்; Magic நடந்தது என்பதெல்லாம் சும்மா “புராணம்”; அறிவுக்குப் பொருந்தாக் “கதைகள்”)
—-
இன்னிக்கும் அபிடேகத்தின் போது பார்க்கலாம்;
*நான்கு கரங்கள்
*பின் இரு கரங்களில், நகையாய்ப் பொருந்தியுள்ள சங்கு-சக்கரங்கள்
*திருமாலுக்கே உரிய, “மார்பில் திருமறு” (திருமகள் மச்சம்)
=இது சிலையோடவே இருக்கும்; பிரிக்க முடியாது
முருகன் சிலைகளில் “திரு மறு” (திருமகள் மச்சம்) கிடையாது;
அவன் மருமகன்;
அன்னை போல ஒருத்தியான திருமகளுடன் தகாத உறவு கொள்வானா? –ன்னு யோசிச்சிப் பாத்தா, சமயச் சழக்கர்கள் வம்பு செய்ய மாட்டார்கள்;
(But for some ppl, religion is first, god only next:)
சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-ன்னு எவ்வளவு தரவு குடுத்தாலும்,
“தங்கள் மனமே முக்கியம்,
தமிழின் உண்மை முக்கியம் அல்ல” என்று இருப்பவர்களுக்கு…
சங்கத் தமிழே வடிவான = முருகனே உணர்த்தி அருளுவான்;
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்;
முருகா – உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்;
வாழ்வில் உழன்றாலும், முருகா – உன்னோடே என்றென்றும் வாழ வேண்டும்
Apr 26, 2013 @ 16:57:47
Thanks for the clarification 🙂
Apr 26, 2013 @ 08:56:20
இதுவரை கேட்காத நிறைய கதைகள் ,தகவல்கள் .அருமை அம்மா :))
@shanthhi
Apr 26, 2013 @ 14:23:31
Thank you 🙂
Apr 26, 2013 @ 12:48:02
Thank you 🙂
Apr 27, 2013 @ 14:26:00
நல்லா கேளுங்க!
Apr 27, 2013 @ 16:48:12
Thank you, sorry did not mention you specifically to ask you to read my post. Thank you 🙂
Apr 28, 2013 @ 14:00:14
:-))