An ode to #365RajaQuiz

IR

நான் @rexarul ஐ ட்விட்டரில் பாலோ செய்து அவர் நட்பைப் பெற்றிருந்தேன். அவர் இந்தப் போட்டியை ஆரம்பித்தப் பொழுது நட்பிற்காக தினம் அவரின் புதிர் வலைத்தளத்திற்குச் செல்வேன். க்விசிற்கு உண்டான பாட்டைப் பற்றி எழுதும் அழகான குறிப்புக்களைப் படிக்கவும் இசை துணுக்கைக் கேட்டு, லைப் லைன் க்ளுவையும் பார்த்து முயற்சி செய்யவும் தவற மாட்டேன். ஒன்றுமே புரியாது. இதில் சில ட்வீப்ஸ் புதிர் போட்ட ஐந்து நிமிடத்தில் டி எம் செக் பண்ணவும், அல்லது பதில் போட்டாச்சு என்று ரெக்சுக்குப்  ட்வீட்டுவர்! இதைப்பார்க்கும் பொழுது என் ஆச்சர்யத்துக்கு அளவே இருக்காது! இவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஜீனியசாக இருக்கவேண்டும் என்று அசந்து நிற்பேன்.

பிறகு ஒரு நாள் BGM புதிர். அந்தப் படத்தை நான் பார்த்திருந்ததால், கொடுத்தக் க்ளூவை வைத்துக் கண்டுபிடித்துவிட்டேன். பிதாமகன்! என்னாலேயே நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியான ஒரு தருணம். நானும் முயற்சி செய்தால் ஒன்றிரெண்டாவது சரியாக விடையளிக்கலாம் என்று அது கொடுத்தது ஒரு நம்பிக்கை. எனக்கு ராஜா இசை புதுசு. நான் அவர் பாடல்களைக் கூர்ந்து கேட்டதில்லை. நான் வளரும் பொழுது ரேடியோவில் எல்லாம் அவர் பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிக் கேட்காததானால் நான் பின்பு வெளிநாட்டில் இருந்த பொழுது அவரின் golden period ஆன 80’s and early 90’s பாடல்களைக் கேட்க தவறிவிட்டேன். ராஜா fans ஆக இருந்திருந்தால் எங்கிருந்தாலும் அவர்கள் அவரின் பாடல்களைத் தேடிக் கண்டுப்பிடித்துக் கேட்டு ரசித்திருப்பார்கள். நான் அந்த category இல்லை. அதையும் தவிர இசை ஞானமும் கிடையாது. கேட்க இனிமையாக இருக்கும் பாடல்களை விரும்பிக் கேட்கும் ஒரு சாதாரண பெண்.

அதனால் நான் இசையை வைத்துப் பாடலைப் பிடிக்க மாட்டேன். அவர் கொடுக்கும் க்ளூக்கள் தான் துணை! So it was a laborious process. I have spent nearly 8 hours on certain clues. நடிகை ராதிகா அல்லது நடிகர் சத்யராஜ் பாடல் என்று க்ளூ மூலம் தெரிந்தால் அந்த நடிகருடைய wiki page க்குப் போய் அவரின் எல்லாப் படங்களையும் எடுத்து அதில் எதெல்லாம் ராஜா இசை என்று பார்த்து ஒரு புத்தகத்தில் நோட் பண்ணி வைத்துக் கொள்வேன். பிறகு அவர் text இல் கொடுக்கும் சில க்ளூக்களை வைத்து அதையும் narrow down பண்ண முயற்சி செய்வேன். அதாவது டூயட் என்று சொல்லியிருந்தால் தனியாக ஒருவர் மட்டும் பாடும் பாடல்களை eliminate செய்து விட்டு ஒவ்வொருப் பாடலையும் கேட்பேன். சில சமயம் அவர் கொடுத்த இசைத் துணுக்கு முடிவில் கூட வரும். ரொம்பப் பொறுமை வேண்டும். என் கணவருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். இரவு டிபனை அவசரமாகக் கையில் கொடுத்து மோரை ஒரு டம்ப்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்துவிடுவேன். சில சமயம் புதிரைக் கண்டுபிடிக்க இரவு பன்னிரெண்டு மணியாகும். திரு @vrsaran ஐத் தான் பதில் சரியா என்றுக் கேட்பேன். அவர் என் ஆர்வத்தைப் பார்த்து எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தார். விட்டுவிடலாம் என்று நினைக்கும் தருவாயில் என்னை ஊக்குவித்து இரண்டாம் சீசனில் 100 மார்க் வாங்கும்படி செய்தார். என்னைப் பொறுத்த வரை இது ஒரு இமாலயச் சாதனை. என் குழந்தைகள் தொலைபேசியில் கூப்பிடும் பொழுது, இரு இதை சால்வ் பண்ணிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளேன். இரவு கண்டுப்பிடிக்க முடியாவிட்டால் அடுத்த நாளும் தொடரும்.

சில சமயம் கண்டுப் பிடிக்க வேண்டும் என்ற வெறி, க்ளூவில் உள்ள அந்த பாடலாசிரியரையோ பாடகரையோ நேரிலோ தொலைபேசியிலோ தொடர்புக் கொண்டு கேட்டுவிடலாமோ என்று தோன்றும் அளவுக்கு இருந்திருக்கு. ஒரு முறை படத்தின் பெயரைக் கண்டுப்பிடித்துவிட்டேன், ஆனால் வீட்டில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. அதனால் பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் CD கடைக்குச் சென்று 80’s ராஜா பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன், படத்தின் பெயரையும் சொன்னேன். அவர் கைக்காட்டிய இடத்தில் குப்பையாக CDக்கள் கிடந்தன. அதில் அந்தப் படத்தைத் தேடிக் கண்டுப்பிடித்து காரில் உள்ள சிஸ்டத்தில் போட்டுப் பாடலைக் கண்டுகொண்டேன் 🙂 இதை @vrsaran இடம் சொன்னபோது நான் மாஃபியா கும்பலின் உறுப்பினர் ஆயாச்சு என்று கூறினார் 🙂

நான் பல சமயங்களில் வயிற்று வலியினால் அவதிப்படுவேன். (Irritable Bowel Syndrome) அந்த சமயங்களில் என்னால் பாடல் தேடுவது முடியாத காரியம். ஆனால் என் கணவர் நான் இந்த புதிர் போட்டியில் பங்கேற்கத் துவங்கியபின் என் வலி வரும் நேரம் குறைந்துள்ளதாக நினைக்கிறார். அது உண்மை என்றால் அந்தப் புகழ் ராஜாவுக்கும் ரெக்சுக்குமே உரியது!

தேடித் தேடிக் கண்டுபிடித்ததால் இதுவரை நான் கேட்காத பலப் பலப் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிட்டியது. மேலும் நான் தேடும் பாடல் அதுவல்ல என்று தெரிந்தும் அந்தப் பாடலை முழுமையாகக் கேட்டு முடிப்பேன், அவ்வளவு அருமையாக இருக்கும் பாடல்கள். இதனால் நேரம் அதிகமானாலும் இசையை அறிந்துக் கொண்டேன். ஒன்றுமே தெரியாமல் புதிருக்குள் நுழைந்த நான், இசையைக் கேட்டவுடன் இது 80’s பாடல், இது 90’s பாடல் என்று differentiate பண்ணும் அளவுக்கு வளர்ந்தேன். முடிவை நெருங்கும் வேளையில் சீக்கிரம் identify பண்ணக் கற்றுக் கொண்டேன். இதில் சிகரம் 359/365! Rex won his Oscars that day! Just listened to the music bit he had uploaded and I identified the song. Did not read the text, did not look at the LL clue! This is what I wrote in the comment section.

“எனக்கு இன்று இருக்கும் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :-) )))))
இசை துணுக்கைக் கேட்டவுடன் பாடலைக் கண்டுபிடித்துவிட்டேன். இங்கு க்விசில் பங்குபெறும் அனைவருக்கும் இது தினப்படி நிகழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு இது மாபெரும் மகிழ்ச்சித் தருணம். நன்றி ரெக்ஸ்!

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா படத்தில் இருந்து :-)

இதைவிட எனக்கு வேறு பரிசு வேண்டாம் 🙂

நான் இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டவைகளை bulletin points ஆக பின்னூட்டத்தில் போட்டதை இங்கேயும் பதிவு செய்கிறேன் 🙂

Thank you @rexarul @irexarul The impact this #365RajaQuiz has created in me is tremendous.

1.Awareness of music in general and in particular of the nuances and intricate variations created by each musical instrument.

2.The fact that music can increase the emotional expression within me.

3.The urge to learn more in a systematic manner. I have probably memorized the Raja Films in an alphabetical order like Alabama, Alaska, Arizona, Arkansas… .

4.Self fulfillment is more important than a material prize.

5.There is a place for everyone in this society if you will to establish yourself.

6. There are lots of good people. You just have to look for them.

7.Inspiration is contagious.

8.Perseverance pays.

9.Tolerance.
If Isai gnyaani can tolerate the gross scenes in the innumerable movies where he was the music director and give such great back ground scores, why can’t we develop patience towards each other?

10. God lives in music.

Thank you very much Rex.
Sushima
(amas32)

நிகழ்ச்சி நிறைவு விழா பற்றிச் சொல்லாமல் இப் பதிவு நிறைவு பெறாது. 28.7.2013 அன்று ஒரு மினி கல்யாணம் தான். அன்று முஹூர்த்த நாளா என்று பார்க்க வேண்டும் 🙂 கோவை, பெங்களூர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் க்விசில் பங்கேற்றவர்களும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். Technology is improved so much I say என்ற கிரேசி மோகனின் டயலாக் படி மாஸ்டர் ரெக்சும் இன்னும் பலரும் இணையத்தின் மூலம் (அவர்களுக்கு இரவு நேரம்) கலந்து கொண்டனர். அந்த இரவு, துளி தூக்கம் இல்லை அவர்களுக்கு. சிவராத்திரி தூக்கம் ஏது என்று மெட்டமைத்தவருக்கு நன்றி சொல்லும் வகையில் ராஜ ராத்திரியாக அவர்கள் இரவுப் பொழுது கழிந்தது. வந்தவர்களில் பலர் குடும்பத்துடன் வந்து குழந்தைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது தனி மகிழ்ச்சி. முதலில் ஜனனி ஜனனி என்ற பாடலுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பெங்களூரில் இருந்து திரு ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சிக்கு வயலின் வாசிக்கவே ஸ்பெஷலாக வந்திருந்து அனைத்துப் பாடல்களுக்கும் வாசித்து சிறப்பூட்டினார். அடுத்து ரெக்ஸ் பேசினார். அவர் எப்படி ஒரு வருடம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார், அதன் சவால்கள், ஒரு 30 வினாடி இசைத் துணுக்கை துல்யமான ஒலியாக நமக்குக் கொண்டுச் சேர்க்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். #thachimammu alias Srivatsan, @tcsprassan alias Prasanna ஆகியவர்கள் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள். ஸ்ரீவத்சன் க்விசில் வந்த அனைத்துப் பாடல்களையும் ஒரு தனி CD யில் போட்டு அனைவருக்கும் பரிசாக வழங்கினார். அதை தயார் செய்து கோவையில் இருந்து ஹக்கீம் பாய் எடுத்து வந்தார். அவர் அங்கு இசை CD கடை வைத்து நடத்துபவர்.  திரு @nchokkan திருவாசகமும் ராஜாவும் என்ற தலைப்பில் அருமையாகப் பேசினார். அதன் தொகுப்பை இங்கே படிக்கலாம். http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/ வந்திருந்த பலரும் ராஜாவின் இசை பற்றியும் இந்த புதிர் போட்டியின் தாக்கம் பற்றியும் பகிர்ந்துக் கொண்டனர்.

இசை வெள்ளத்தை அனுபவிக்க உணவும் தேவையாயிற்றே! உணவு வகைகளும் நிறைய இருந்தன. மதிய உணவிற்கு சப்பாத்தி, சன்னா, சாம்பார் சாதம், சிறு உருளைக்கிழங்கு கரி, வறுவல், அக்காரவடிசல், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய். கோக், பெப்சி, மிரிண்டா, செவன்அப், ஜூஸ், தண்ணீர் இவையெல்லாம் தாகத்திற்கு. பின் 3மணிக்குக் காபி, டி. 4 மணிக்கு போண்டா சட்னி, காராசேவு, முறுக்கு, மைசூர்பா, குட்டி லட்டு. TCS Prasanna & R.Prasaanna sang most of the songs. ஆனால் பலரும் அவர்களோடு சேர்ந்து பாடினர். நிகழ்ச்சி நிறைவு பெற மாலை 6 மணி ஆகியது. நிறைவுப் பாடல்கள் ராஜா கைய வெச்சா, போட்டு வைத்த காதல் திட்டம்… திரு ரெக்ஸ் நடுவில் rapid fire quiz ம் வைத்தார். அதில் 6/6 வாங்கினவர் ஹக்கீம் பாய். சிலர் இந்த நிகழ்ச்சி நடப்பதுத் தெரிந்து அவர்களே ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.

Three cheers to Rex and all the participants who made this year long event a grand success!

Here is the link of the collage of photos taken on #365RQFinale http://www.youtube.com/watch?v=NKBToLz36eA&feature=youtu.be thanks @seevin alias Vinodh 🙂

 

பெற்றால் தான் பிள்ளையா?

ranga1

நேற்று என் உறவினர் திடீர் எனக் காலமானார். ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழ்ந்தவர். வயது எண்பத்திரெண்டு. அஹோபில மடத்துக்குச் சென்று ஆச்சார்யனை வணங்கிப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து, தானும் சிறிது உண்டு தன் மனைவிக்கு மிச்சத்தைக் கொடுத்து, பின் வீட்டின் பின்புறம் கால்களைக் கழுவப் போன இடத்தில் மயங்கி சரிந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றும் பயனில்லை, cerebral hemorrhage. அவரைப் பொறுத்த வரையில் நல்ல மரணம். கணவன் மனைவி இருவரும் மிகவும் எளிமையானவர்கள். காவேரியில் நீராடுவதும் ரங்கனையும் தாயாரையும் தரிசிப்பதுமே அவர்களின் தினப்படி ஆனந்தங்கள். வந்தாரை அன்புடன் உபசரித்து வாயார வாழ்த்துவது அவர்களின் வாழ்வின் குறிக்கோள்.

ranga2

அனால் நான் இங்கு சொல்ல வந்தது வேறு ஒரு கதை. அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின் மனைவி அவர்கள் குடும்பத்தில் மூத்த மகள். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள், ஒரு பிள்ளை. அவரின் கடைசி தங்கைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை. மேலும் அந்தத் தங்கை வேறு பல காரணங்களால் இரு குழந்தைகளையும் பராமரிக்க சிரமப்பட்டதால் எந்தக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையோ அந்தக் குழந்தையை இவர்கள் எடுத்து வந்து வளர்த்தனர். என் உறவினருக்கு அப்பொழுதே நாற்பத்தியெட்டு வயது இருக்கும். இவர்களிடமும் சொந்தப் பெற்றோரிடமுமாக மாறி மாறி இருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் இவர்களுடனே இருக்க ஆரம்பித்துவிட்டான். இவர்களும் பலத் திருத்தலங்களுக்குச் சென்று பலவாறு வேண்டி அதன் பலனாகவோ என்னவோ மிகுந்த ஆரோக்கிய வாழ்வையே வாழ்ந்து வந்தான். பதின்ம வயது வரும் சமயத்தில் சட்டப்படி இவர்கள் அவனை தத்து எடுத்துக் கொண்டனர். மிகுந்த பாசத்துடனே வளர்த்தனர்.

நான் வெளியூரில் இருந்ததால் அவனுடன் முதலில் ரொம்பப் பழகியதில்லை என்றாலும் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவனுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் மிகவும் அன்பு அவனுக்கு. அவன் வேலைக்குச் சேர்ந்தவுடன் இதய அறுவை சிகிச்சையும் நடந்து நல்ல உடல் நலத்தையும் பெற்றான்.

தெரிந்தே நடந்த தத்து. ஆனாலும் அந்தப் பிள்ளைக்கு இதனால் மன உளைச்சல் உண்டு. பெற்றத் தாயிடமும் வளர்த்தத் தாயிடமும் ஒரே அளவு பாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு. பெற்ற தாய்க்கு ஒரு குற்ற உணர்ச்சி, குழந்தையைக் கொடுத்து விட்டோமே என்று. வளர்த்தத் தாய்க்கு பயம், பிள்ளை நம்மிடம் பாசமில்லாமல் சொந்தத் தாயிடம் போய்விடுவானோ என்று. மகனுக்கோ டைட் ரோப் வாக் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சிறு வயது முதலே பெரிய பொறுப்பு. இதன் ஊடே ஒரு சின்ன விசனமும், ஆரோக்கியக் குழந்தையை தத்துக் கொடுக்காமல் தன்னைக் கொடுத்துவிட்டார்களே என்று. வாழ்க்கை தான் எவ்வளவு காம்ப்ளெக்ஸ் பாருங்கள்!

ஆனால் அவன் அனைத்தையும் கடந்து அற்புதமாக உருவாகியுள்ளான். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்குத் தந்தை. அந்தப் பேரக் குழந்தையைக் காணும் பேறும் என் உறவினருக்குக் கிடைத்தது. இரு பெற்றோர்களையும் சமமாக பாவித்து அன்பு செலுத்தவும் அவன் கற்றுக் கொண்டான்.

ஆனால் அவன் நேற்று என்னையும் என் கணவரையும் பார்த்தவுடன் ஒடி வந்துக் கட்டிக் கொண்டு அவரில்லாமல் இன்று நானில்லை என்று என் உறவினரைக் கைகாட்டி கதறியது அவன் மனத்தில் அவர் மேல் வைத்திருந்த தகப்பன் என்ற பாசத்தைக் காண்பித்தது.

அதையும் விட தன் உயிரைக் காப்பாற்றி, பேணிக் காத்தவர் என்ற நன்றியுணர்ச்சியும் அங்கு நிறைந்திருந்ததைக் கண்டேன். ஆழ் மனத்தில் எத்தனையோ உணர்வுகள், துக்கம் பீறிடும் சமயத்தில் உண்மை வெளிப்படுகிறது.

ஆனால் அவனைப் போல ஒரு மகன் கிடைக்க என் உறவினரும் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும். அவர்களின் நல்ல மனசுக்கேற்ற ஒரு நல்ல மகன், அவர்கள் வயிற்றில் பிறக்கவில்லையேத் தவிர 100% சதவிகிதம் அவர்கள் மகன் அவன்!

ranga3

மரியான் – திரை விமர்சனம்

mariyan

வந்தே மாதரம் புகழ்  பரத் பாலா இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்திருக்கும் புதிய  திரைப்படம் மரியான்! இசை  AR ரஹ்மான், கேமரா மார்க் கொனின்க்ச், எடிட்டிங்  விவேக் ஹர்ஷன். நாயகன் நாயகி தனுஷ், பார்வதி மேனன்.  தமிழ் நாட்டில் இருந்து எண்ணெய் கிணற்றில் வேலை செய்ய சுடான் நாட்டிற்குச் சென்ற மூவர், பணத்திற்காகப் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுப் பின் தப்பி வந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் மரியான்.

படத்தின் உயிர் நாடி ரஹ்மானின் பின்னணி இசை. திரைக்கதை சொல்லவேண்டியதை இசையே சொல்லிவிடுகிறது.  பாடல்கள் அனைத்தும் முன்பே ரிலீசாகி FM வானொலியிலும் CD விற்பனையிலும் சக்கை போடு போட்டுள்ளது, அதனால் அதைப் பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை. ரொம்ப நன்றாகவே உள்ளது. நெஞ்சே எழு என்ற பாடல் ரஹ்மான் இசையமைத்த வேறு ஒரு பாடலின் சாயல் போல தோன்றினாலும் சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன’ மிக அருமையான மெலடி!

தனுஷ் நன்றாக நடித்துள்ளார் என்று சொல்வது ட்விட்டர் மொழியில் மீள்! அவர் சிறந்த நடிகர் என்று ஆடுகளத்திலேயே நிருபித்து விட்டார். மீனவ இளைஞனாக நடித்திருப்பது நல்ல ஒரு மாறுதல். கொடுத்தப் பாத்திரத்தை அனாயாசமாக செய்கிறார். பார்வதி மேனனுக்கு இவ்வளவு விசிறிகள் இருப்பதில் வியப்பேதுமில்லை. அழகானக் கண்கள்! மேலும் அவர் கண்கள் உணர்ச்சிகளை அழகாகக் காட்டுகின்றன. காதலியாக வாழ்ந்திருக்கிறார்.

பனிமலர் தந்தையாக வருபவர் பாத்திரத்தில் சோபிக்கவில்லை. என்ன குறை என்று புரியவில்லை ஆனால் வேறு ஒருவரைப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாகப் பொருந்தியிருப்பாரோ? வில்லன் நடிகர் விநாயகம் ஒகே. அப்புக்குட்டி நண்பன் பாத்திரத்தில் வந்து செவ்வனே செய்திருக்கிறார். ஜகன், இம்மான் அண்ணாச்சி நல்ல துணை பாத்திரப் படைப்பு/நடிப்பு! என்னைப் பொறுத்த வரையில் உமா ரியாஸ் ஏமாற்றிவிட்டார். மரியானைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டும், அவன் முன்னுக்கு வரவேண்டும் என்று அவனை விரட்டிக் கொண்டே இருக்கும்  பாத்திரம் தான் உமா ரியாசினுடையது. மரியான் காதலுக்கும் காதலிக்கும் அவரே எதிரி. அவர் மிகச் சிறந்த நடிகை. இந்த மாதிரி ஒரு முக்கிய பாத்திரத்தில் உமா ரியாஸ் இன்னும் வலுவாக நடித்திருக்கலாம். {இந்தப் படத்தில் உமா ரியாசுக்கு அவரின் அம்மா கமலா காமேஷ் சாயல் நிறைய தெரிகிறது}

சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரொம்ப அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கன்யாகுமரியைச் சேர்ந்த கடலும் கடலைச் சார்ந்த இடங்களும் ஒளி ஒவியம்! வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு நிகராக உள்ளது ஒளிப்பதிவு.

எடிட்டிங்கில் குறை சொல்ல முடியாது. ஆனால் திரைக்கதை  இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். முதல் பாதியில் தனுஷ் காதலிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நேரம் ஆகிறது. காதலை முதலில் மறுப்பதற்கும், பின்பு காதல் வசப்படுவதற்கும் வலுவான சம்பவங்கள் இல்லை. டைட்டானிக்கும் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் தான். ஆனால்  ஜாக்கிற்கும் ரோசிற்கும் மலரும் காதல் தான் அந்த படத்தைத் தூக்கி நிறுத்தி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக்கியது.

இங்கும் பரத்பாலா ஒரு கடத்தல்/பிணைக்கைதி உண்மை சம்பவத்தைப் பின்னணியாக வைத்து காதல் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் பின் பாதியில் தனுஷ் அத்தனை சோதனைகளையும், இடர்களையும் தாண்டி தப்பித்து வர எடுக்கும் முயற்சிகள் காதலின் சக்தியினால் தான் என்பதை நம்ப மறுக்கிறது மனம்.

நல்ல முயற்சி! வாழ்த்துகள் 😀

My Recent Trip to the US And My Thoughts On It

I had gone to the US for two months to spend time with my daughter and son who live there. My son lives in the quaint and beautiful city of Seattle in Washington State, which is where Starbucks opened its very first shop! I stayed with him for four weeks and then went to Los Angeles to stay with my daughter for another four weeks. Though I arrived in Seattle in mid April it was still quite cold there. My son had recently moved from the neighbouring city of Bellevue to Seattle since he wanted to live in a hip and happening place! So I too had the pleasure of enjoying living in Seattle for a month 🙂 His apartment was in one of the main streets where many a time I could watch protest processions of all kinds go by (once there was a procession demanding cannabis be allowed to be home grown!) The picture below is his apartment building.

aptbldg

He lives in the first floor and if you keep the window open you can listen to the chatter of the passers by. Right across was a grocery store where I went shopping almost every day and made the sales people there my friends! The bus stand was also very close by. My son normally takes the bus to work and I could see him board the bus from my window. The apartment building is an old one but recently refurbished with beautiful hard wood floors and a lovely fire place. My son never cooks at home. I had sent him to a cookery class, stuck the recipes for sambar and rasam on the fridge but nothing would make him venture into the kitchen except probably to get a glass of water. So during my one month stay there he loved eating my home cooked meals and that joy was enough to make my whole trip worthwhile 🙂 I am never bored where ever I am. Since I lived in the US before I have a fondness for American sitcoms and enjoy seeing them again and again. Luckily there is no dearth of these shows which air as reruns through out the day in some channel or the other. So even though my son used to return quite late from work I was quite fine 🙂 Of course internet was another great blessing to keep me occupied. The roads in Seattle are like those in Bangalore, going high up and then sloping down. So going for walks was a little tiresome for me, more over the rains almost every day was another deterrent for me. I think it rains almost 200 days in a year in Seattle.

Uninterrupted supply of electricity, super fast internet connection, fresh vegetables and milk, clean and smooth roads, the convenience to travel anywhere at a moment’s notice all made me realize how wonderful life is there compared to the day to day living struggles in Chennai.

It was very sweet of @Nilavinmagal and @soyahere to come and visit me with their families 🙂 I spoke to a few twitter friends while I was there.

While I was in Seattle I celebrated my birthday with my son. We were together for my birthday after many years and he made it extra special by giving me a super laptop as my birthday gift!

N'slaptop

We visited The Japanese Garden on a fairly sunny day. It was very beautiful! We also saw the Thamizh film “Soodhu Kavvum” in a theater there. It was a lot of fun. My son’s friends also came and that is definitely a movie to be watched with friends 🙂 Any way that was a far better experience than our previous on of going to watch “Udhayam” and finding the show cancelled for want of audience. So we ended up seeing a Hindi movie (which by the way had only 4 people including us)! Really wondered how the theater made money!

japgarden2

My son and I left for Los Angeles to attend my daughter’s graduation. My husband joined us from India. Graduation is very important in American culture, be it high school graduation or college graduation. It is a ritual for them to attend the graduation of their loved ones with friends and family. The event is also beautifully organized and extremely well conducted. The graduating students find pride in their achievement when it so well celebrated. My daughter’s graduation in the University Of Southern California was one such memorable event. The commencement speaker was a successful movie playwright and a director. His wife is an actor. He shared with us the trials and tribulations of being in the cine field and how he overcame his obstacles and currently how his son was trying to become a football player and not an artist 🙂 I admire the fact that Americans  have a very good sense of humour in general and excellent presentation skills!

balloon grad

My daughter got a Masters degree in Fine Arts – Dramatic Writing in this graduation ceremony. The university accepts only three students per year and so the class contains only three students. We were very proud of her hard work and achievement and to top it all off two of her plays won first prizes in a national level competition and will be produced and staged in Feb of 2014. This is such a big honour!

madgrad

The following weekend was the reading of my daughter’s play “A Nice Indian Boy” (This is one of the plays that got the prize) This is a very important occasion for my daughter as we get to see what she did in the last three years! The play was both humourous and emotional. This is the first time ever my husband and I were listening to her play. Kudos to her!

reading of the play

reading of the play

We wanted to visit San Jose to meet our old friends and the plenty of relatives who live there. It was a five hours drive from LA. We got to meet so many of our friends and relatives there. Most of their children had taken up jobs and/or married. It was sad to see some of the friends who had lost their jobs and were unemployed because of their age. But they were also actively involved in community programmes and seemed quite happy.

The city had changed a lot and that was only expected. Lots of new buildings and places which used to be vacant were now filled with houses and shopping malls. We met @rskumaran in San Jose with his newly wed wife. Their hospitality was so wonderful. They plan to go back to India in a few years. Hope their dream comes true. The photo below is a picture of their puja area 🙂

rskumaran

We visited a former relative of ours whose house got burnt down recently and was living in a rented place. The reason I said former relative was because the person was previously married to our cousin and then the marriage ended in a divorce. We were told that insurance would cover 90% of the cost of rebuilding and that was some solace to hear. We visited another friend of mine whose house was recently damaged by water! Suddenly the water pipe broke in the middle of the night and before they could switch off the water connection the bath tub in the first floor fell through the roof to the ground floor, not bearing the weight of the overflowing water.  Both the ceiling and the floor were totally broken not to speak of the damage caused by water soaking the wood. I am mentioning these two incidents mainly to highlight the fact that the houses there are made of wood and quickly succumb to damage caused by fire or water.

I did a lot of shopping there 🙂 I have a lot of friends, so I bought quite a bit of small items to be gifted. There are plenty of malls which are so huge that one becomes tired just by walking through it! Whatever is available there is also available in India and in fact even cheaper. But when you visit the US you feel compelled to buy stuff from there.

We also visited our old house in San Jose. Some minor modifications only were made to that house and surprisingly our next door neighbour remembered me and my son after so many years, more surprisingly he was still in the same house 🙂

HermaSt

In one part of LA there is a look alike of Venice city. This was was built by a millionaire who felt that US lacked culture like that Europe so richly had. Hence he built this canal and lovely houses sprung on either side of the canal. Just walking by these houses is a sight for sore eyes.

venice canal

We then went to San Diego to visit another relative. This city is in the border of Mexico. The state of California itself once belonged to Mexico. So you will find lots of Hispanics every where. Knowing Spanish will greatly help if you plan to live in California for long. The Mexican immigrants are more  in the Southern California than in Northern region. My daughter and I spent a weekend in a cousin’s house in San Diego. We met @dagalti in San Diego though he resides in Chennai. I respect him a lot for his writing and so was very happy to finally meet him. The photo below was taken at one of the beaches in San Diego.

sandiego

My daughter lives with three other room mates in a nice house near Down town LA. One of her room mates is a Tamilian. She is soon to be married to a tweeter @complicateur who was one of the earliest tweeps I followed when I first came to twitter 🙂 He is a big Raja fan and a good Tamil blogger. We used to watch a lot of Tamil movies on the internet and had fun while I was there. Another room mate is a second generation Koreon. She is such a nice girl. Every time she left for work she will bend and do namaskaram like thing and leave. I really annoyed my daughter by repeatedly telling her that she is such a nice girl 🙂 Another room mate is an American. She was also a very sweet person. All these girls share an apartment so nicely, using the common kitchen effectively that I really felt if they carried the same attitude of adjusting well with others in the same household, they will do well in their married life as well 🙂

My daughter took me a huge Rose garden in LA called the Huntington Rose Gardens. Not only do they have rows and rows of rose bushes, they also maintain gardens based on countries, like the Chinese Garden, Japanese garden etc. The photo below was taken at one part of the garden.

rosegarden

When I was in Seattle I hardly went for walking, mainly due to rains and also because I was not well when I was there. But when I was in LA I was able to for walks every day. There is hardly any rainfall in LA through out the year. Yet the city abounds in colourful blossoms! I was bewitched by the beauty of the flowers when I went on my walks and took so many photographs of them that I started uploading one photo a day on twitter since then 🙂

My daughter’s professor and Head of the Department invited me for lunch to discuss my daughter’s future. That showed their dedication to their profession. I also met My daughter’s former boss who was willing to help my daughter in which ever way she could.

Since I was a visitor during the two months of my stay there I did not have much responsibilities. But since I stayed with my children I tended to step in to fill up their shortfalls. Things have definitely changed since we left the US in 1993. I would say for the better. Indian groceries and other necessities are available easily and at an affordable cost. An Indian wedding with the same pomp, splendour and rituals can now be celebrated in the US with ease. Temples are architecturally similar, beautifully maintained and follow the same systems as in India. The photo below is of the Malibu temple in Los Angeles.

malibu temple

For those Indians who move there and have no unemployment problems, US is heaven. Unless one really wishes and strives hard to move back to India it will not happen to him. As long as one is healthy there is no need to seek the assistance of relatives for help and even in such a need friends fill in for them. With friends it is easier to communicate and be more matter of fact than with relatives. So it is more comfortable to live in the US without the hassles of dealing with nosy relatives. In recent times families as a whole move to the US. So when brothers and sisters are easily accessible even visits to India become rare. Some years back house hold help was unavailable or expensive. Now cleaning services vacuum the house, clean the bathrooms and kitchen at affordable prices. There are separate agencies and gardeners for maintaining the yard. To top it all cooks are available to come home and cook at hourly rates or sell food from their home which we can go collect.

Children born and brought up there are Americans in the true sense of the word. They may have the Indian skin colour and the Indian looks but in their thought word and action they are 100% true bred Americans.

When the time arrived for me to leave LA I was sad that I will miss my daughter. This was the same feeling I had when I left my son in Seattle a month earlier.

A successful stock broker is one who not only knows when to buy stocks but also knows when to sell. Like wise a parent must learn to cut the apron strings at the right time to let the children grow independently, no matter how much it hurts. Bhagavadh Gita says the same thing. Once we show the pathway it is up to them to continue their journey.

என் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-)

நான் இந்த முறை இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்றிருந்தேன். மகனுடன் சியாட்டிலில் நான்கு வாரங்கள். மகளுடன் லாஸ் ஏஞ்சலஸில் நான்கு வாரங்கள். முதலில் சென்றது வாஷிங்க்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டிலுக்கு. மிகவும் அழகான ஒரு நகரம்.முதன் முதலில் Starbucks என்ற காபிக் கடை அந்த ஊரில் தான் ஆரம்பித்தது. பிறகு அது மிகப் பெரிய செயின் ஸ்டோராக மாறி அது இல்லாத தெருவே இல்லை என்று ஆகிவிட்டது! நான் ஏப்ரல் நடுவில் சென்றாலும் இன்னும் நல்ல குளிர் இருந்தது. என் மகன் பெல்வியு என்ற நகரத்தில் இருந்து சியாட்டிலுக்குக் குடிபெயர்ந்திருந்தான். பெல்வியு ஒரு அமைதியான இடம். சத்தம் நிறைந்த இடத்தில் நகர வாழ்க்கை வாழ வேண்டும் என்று விருப்பப் பட்டதால் சியாட்டில் வந்திருந்தான். மெயின் தெருவின் மேலேயே வீடு. கீழே உள்ள படம் தான் என் மகனின் அபார்ட்மெண்ட்.

aptbldg

ஜன்னலைத் திறந்து வைத்திருந்தால் கீழே நடப்பவர்கள் பேசும் சத்தம் கேட்கும். அவன் தெருவில் மட்டுமே நான்கு பார்கள்! எதிரேயே பேருந்து நிறுத்தம். என் மகன் வேலைக்குப் பேருந்தில் தான் செல்வான். பக்கத்திலேயே மளிகைக் கடை. நடந்து சென்றுத் தேவையானப் பொருட்களை நானே வாங்கி வந்துவிடுவேன். முதல் மாடியில் குடியிருப்பு. பழைய கட்டிடம், அதனால் மின் தூக்கிக் கிடையாது. தரையில் கார்பெட் கிடையாது, hardwood floor, அழகான fireplace! என் மகன் வீட்டில் சமைப்பதில்லை. சமையல் வகுப்புக்கு அனுப்பி, குளிர்சாதனப் பெட்டியின் மீது ரசம், சாம்பாருக்கான சமையல் குறிப்புக்களை அச்சிட்டு ஒட்டியும் ஒரு பயனும் இல்லை. அதனால் நான் இருந்த ஒரு மாதமும் நான் சமைத்த உணவை விரும்பி உண்டது தான்அமெரிக்கா சென்றதற்கான நான் கண்ட பலன் 🙂

நான் முன்பு பல வருடங்கள் அங்கு இருந்ததால் அந்த ஊர் தொலைக் காட்சி காமெடி நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பல காட்சிகளை விரும்பி நாள் முழுக்க பார்ப்பேன். இணையம் நல்ல துணை. மகன் வேலை முடிந்து லேட்டாக வந்தாலும் பொழுது போவதில் சிரமம் இல்லை. பெங்களூர் மாதிரி ரோடுகள் மேலே ஏறி கீழே இறகும் வகை. அதனால் நடைப் பயிற்சி கொஞ்சம் மூச்சிரைக்க வைக்கும். மேலும் கண்ட நேரத்தில் மழை வரும். சியாட்டிலில் வருடத்தில் 200 நாட்களாவது மழை உண்டு என்று நினைக்கிறேன். தடை படாத மின்சாரம், விரைவாக செயல்படும் இணைய இணைப்பு, நல்ல காய்கறிகள், சத்தான பால், சுத்தமாகக் கழுவி விடப்பட்ட தோற்றத்தைத் தரும் தெருக்கள், நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லும் வசதி அனைத்துமே சென்னையிலிருந்து அந்த ஊரை சுகப்படுத்திக் காட்டியது.

என்னை அங்கு @nilavinmagal @Soyahere ஆகிய ட்வீட்டர்கள் என்னை குடும்பத்துடன் வந்து சந்தித்தது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

அங்கு இருந்தபோது சில ட்விட்டர் நண்பர்களுடன் உரையாடினேன். ஒருவர் என் தமிழ் ஆசான் @elavasam , மற்றவர் என் இசை ரசனைக்கு ஆசான் @rexarul 🙂 திரு ரெக்சை முன்பே சந்தித்துள்ளேன். திரு இலவசம் அவர்களுடன் இது தான் முதல் முறை உரையாடுவது. அவருடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி 🙂 அதே போல @sricalifornia  வுடன் முதல் முறை உரையாடியது பெரும் மகிழ்ச்சி 🙂  திரு @losangelesram  அவர்களிடமும் முதன் முறையாகப் பேசினேன். சந்திக்க முயன்று, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சந்திக்க முடியவில்லை.

நான் அங்கு இருந்த போது என் பிறந்தநாள் வந்தது. என் மகனுடன் பல வருடங்கள் கழித்து என் பிறந்தநாளைச் சேர்ந்து கொண்டாடினேன். அருமையான லாப்டாப்பை எனக்கு அவன் பரிசளித்தான் 🙂

N'slaptop

அங்குள்ள ஜாபனீஸ் தோட்டம் மிகவும் அழகு. அதற்கு ஒருநாள் மகன் அழைத்துச் சென்றான். சூது கவ்வும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று ஒரு நாள்  கண்டு களித்தோம். சூது கவ்வும் திரைப்படத்தை என் மகனின் நண்பர்களுடன் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதற்கு முன்னால் உதயம் திரைப்படம் பார்க்கச் சென்று யாருமே வராததால் படத்தைத் திரையிடுவதையே கேன்சல் செய்துவிட்டனர். பிறகு ஒரு இந்தித் திரைப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். அதுவும் பயமாக இருந்தது. படத்தினால் அல்ல, திரையரங்கில்  மொத்தம் எங்களையும் சேர்த்து நான்கு பேர்கள் தான்!

japgarden2

லாஸ் ஏன்ஜலசுக்கு என் மகனுடன் சென்றேன். என் கணவரும் அங்கு வந்திருந்தார். என் மகளுக்கு graduation! நமக்கு இங்கே மஞ்சள் நீராட்டு விழா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அங்கு பள்ளி இறுதி, இளங்கலை, முதுகலை பட்டம் பெரும் நிகழ்ச்சிகள்! சுற்றத்தாருடன் அந்த நிகழ்ச்சிக்குச் சென்று சிறப்பிப்பது அந்த நாட்டின் மரபு. ரொம்ப நன்றாக நடந்தது என் மகளின் பட்டமளிப்பு விழா. அந்த நிகழ்ச்சியின் Key note speaker மிக அருமையாகப் பேசினார். அவர் ஓர் வெற்றிப்பெற்ற திரைப்பட கதை வசனகர்த்தா, இயக்குநரும் கூட. அவர் மனைவி ஒரு நடிகை. கலைத் துறையில் முன்னேற முயலும்போது வரும் இடர்பாடுகள், அதை அவர் சமாளித்த விதம், அவர் தன மனைவியை சந்தித்த விதம், தற்போது அவர் மகன் எப்படி கால்பந்து வீரனாக இருக்க முயன்று கொண்டு இருப்பது முதல் அனைத்தையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டார்.

balloon grad

இந்த பட்டமளிப்பு விழாவில் என் மகள் நாடகக் கதை வசனம் எழுதுவதில் முதுகலைப் பட்டம் பெற்றாள். இந்த வகுப்பில்  வருடத்திற்கு மூன்று பேர்களை தான் இந்தக் கல்லூரி சேர்த்துக் கொள்ளும்.threenames

மிகவும் உழைத்து மகள் வாங்கிய பட்டத்தை எண்ணி எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதில் அவளின் இரு நாடகங்கள் அமெரிக்க அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசை வென்று Feb 2014 ல் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்படப் போகிறது. இது பெரிய பேறு.

madgrad

அவளின் பரிசுப் பெற்ற நாடகத்தை முதல் முறையாக நாங்கள் அவள் கல்லூரி நடத்திய Drama readingல் கேட்டோம். ரொம்ப நகைச்சுவையாகவும் கடைசியில் நெகிழ்ச்சியாகவும் இருந்தது நாடகக் கதை.

reading2

நாங்கள் வாழ்ந்த சான் ஹோசே என்ற நகரத்திற்குச் சென்று எங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க எண்ணியிருந்தோம். அதன் படி இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் ஐந்து மணி நேரக் கார் பயணத்தில் சான் ஹோசே சென்றடைந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் பல உறவினர்களையும் சந்தித்தோம். ஐந்து நாட்கள் அந்தப் பகுதியில் இருந்தும் எங்களால அனைவரையும் சந்திக்க முடியவில்லை. எங்கள் நண்பர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்ல வேலைகளிலும் திருமணம் முடித்த நிலையிலும் இருந்தனர். சில நண்பர்கள் வேலை இழந்து வயதின் காரணமாக இன்னொரு வேலை கிடைக்காமல் இருந்தது மனத்துக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால் எப்படியோ சமாளித்து பல்வேறு செயல்பாடுகளில் பங்களித்துக் கொண்டு மகிழ்ச்சியாகத் தான் தோன்றினார்கள்.

ஊர் முற்றிலும் மாறியிருந்தது. அது இயற்கையே. பல புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. ட்வீட்ட்ர் @rskumaran ஐயும் அவர் மனைவியையும் அங்கு சந்தித்தோம். அவர் விருந்தோம்பல் அவ்வளவு அருமை! புதுமணத் தம்பதிகளான அவர்கள் சில வருடங்களில் தாய் நாடு திரும்பும் எண்ணத்தில் உள்ளனர். அதே நடக்க என் வாழ்த்துகள் 🙂 அவரின் வீட்டு சுவாமி மாடப் புகைப்படம் கீழே 🙂

rskumaran

என் முன்னாள் உறவினர் ஒருவரின் வீடு தீப்பிடித்து எரிந்து அவரை வாடகை வீட்டில் சந்தித்தது ஒரு சோகம். ஆனால் காப்பீட்டுத் தொகை திரும்பவும் வீடு கட்ட ஒரு 90% ஆவது உதவும் என்று அவர் கூறியது ஒரு ஆறுதல். ஏன் முன்னாள் உறவினர் என்று எழுதியுள்ளேன் என்று நினைக்கிறீர்களா? அவர் எங்கள் உறவினரை விவாகரத்து செய்தவர். இன்னொரு தோழியின் வீட்டில் திடீரென தண்ணீர் பைப் வெடித்து தண்ணீரின் கனம் தாங்காமல் பாத் டப் முதல் மாடியிலிருந்து விழுந்து உடைந்து கீழ் தளத்தின் கூரையிலும் தரையிலும் பெரிய ஓட்டைகள். தெய்வாதீனமாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. இந்த ரெண்டு நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுவதன் காரணம் அங்கே வீடுகள் மரத்தால் ஆனவை. ஆதாலால் தீயில் நிமிஷமாகக் கருகிவிடக் கூடியவை, தண்ணீரின் டாமேஜையும் தாங்காதவை.

கணவருடன் நிறைய ஷாப்பிங் செய்தேன் 🙂 எனக்கு நண்பர்கள் அதிகம். அதனால் சின்ன சின்னப் பொருட்களாக நிறைய வாங்கினேன். அங்கே நிறைய மிகப் பெரிய மால்கள் உள்ளன. ஆனால் என்ன நடந்து நடந்து கால்கள் அசந்து போய்விடுகின்றன. மேலும் இங்கே சென்னையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன, இன்னும் விலை குறைவாக! அங்கு சென்று வந்தால் ஏதாவது வாங்கிவரவேண்டும் என்ற கட்டாயத்தால் வாங்கினேனே தவிர நான் பார்த்த வரையில் நம் தேவைகேற்றப் பொருட்கள் இங்கே நன்றாகக் கிடைக்கின்றன.

சான் ஹோசேயில் நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டைச் சென்று பார்த்தோம். சின்ன மாறுதல்கள் தான் செய்திருந்தார்கள். வீடு நன்றாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் என்னை நினைவில் வைத்துக் கொண்டிருந்தது தான்! அவரும் வீட்டை மாற்றாமல் இருந்தது இன்னொரு ஆச்சர்யமே 🙂 அங்கு நான் எடுத்துக் கொண்டப்  புகைப்படம் கீழே .

HermaSt

LA யில் வெனிஸ் நகரைப் போலவே ஒரு இடத்தை ஒரு செல்வந்தர் உருவாக்கி வைத்துள்ளார். அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பழமையான கலாச்சாரம் போல் ஒன்றும் இல்லாததால் அவர் இதைச் செய்தாராம். நடுவில் நீரோடை. இரண்டு பக்கமும் மில்லியன் டாலர் வீடுகள் 🙂

venice canal

என் மகள் சான் டியேகோ என்னும் ஊருக்கு இன்னொரு உறவினரைப் பார்க்க அழைத்துச் சென்றாள். அது மெக்சிகோ நாட்டின் பார்டரில் உள்ளது. லாஸ் ஏஞ்சலஸ், மற்றும் கலிபோர்னியா மாகாணம் முழுவதுமே ஒரு காலத்தில் மெக்சிகோவைச் சேர்ந்தது தான். அதனால் ஸ்பானிஷ் பேசும் மெக்சிகோவில் இருந்து வந்தவர்கள் தான் இங்கே அனேகமாக உள்ளனர். இங்கிருந்தால் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்வது நல்லது. சான் டியேகோவில் ஒரு வார இறுதித் தங்கினோம். அங்கு சென்னையைச் சேர்ந்த ட்வீட்டர் @dagalti ஐ சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கு சந்திக்காமல் அங்கு சந்தித்தது மகிழ்ச்சியே 🙂 கீழே உள்ளப் புகைப்படம் சான் டியேகோ கடற்கரையில் எடுத்தது.

sandiego

என் மகள் இன்னும் மூன்று ரூம் மேட்டுகளுடன் ஒரு வீட்டில் தங்கியுள்ளாள். அனைவருமே ரொம்ப நல்லப் பெண்கள். அதில் ஒருவர் தமிழ். அவருக்கும் நான் ட்விட்டர் வந்ததும் முதலில் பாலோ செய்த @complicateur க்கும் காதல் திருமணம் நடக்க இருக்கிறது. காம்ப்ளிகேடர் மிகப் பெரிய ராஜா விசிறி, தமிழ் ஆர்வலர். அங்கு இருந்த போது அவரும் நானும் பல தமிழ் படங்களை இணையத்தில் பார்த்து ரசித்தோம் 🙂

இன்னொரு ரூம் மேட் கொரியா நாட்டு வம்சாவளிப் பெண் . மகா நல்ல பெண். இதை நான் பல முறை சொல்லி சொல்லி என் மகள் ரொம்ப கடுப்பாகிவிட்டாள். தினம் வேலைக்குச் செல்லும் முன் எனக்கு குனிந்து வணக்கம் கூறிவிட்டுத் தான் செல்வாள். இன்னொரு பெண் அமெரிக்கன். அவளும் இருக்கும் இடமே தெரியாது. அவர்கள் பொதுச் சமையல் அறையில் அவரவர் பொருட்களை வைத்துக் கொண்டு அழகாக சமைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வதைப் பார்க்க, இதே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை குடும்ப சூழலிலும் அவர்கள் பின்னாளில் கடைப்பிடித்தால் அவர்களின் குடும்ப வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.

LA யில் மிகப் பெரிய ரோஜா தோட்டத்திற்கும் சென்று வந்தேன். அங்கு பலதரப்பட்ட ரோஜா தோட்டத்தைத்  தவிர பலவித நாட்டைச் சேர்ந்த தோட்ட வகைகளையும் உருவாக்கிப் பராமரிக்கின்றனர். அதில் ஒரு படம் கீழே!

rosegarden

நான் சியாட்டிலில் இருந்தபோது மழை, உடல் நலமின்மை, காரணமாக வாக்கிங் அதிகம் செல்லவில்லை. அனால் LA யில் இருந்தவரை தினமும் செல்ல முடிந்தது. LAயில் மழையே கிடையாது. ஆடிக்கொரு முறை தான் பெய்யும். இருந்தும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன! அங்கு நான் எடுத்தப் புகைப்படங்களைத் தான் நான் இப்பொழுது தினம் ஒரு பூ படமாக ட்விட்டரில் போட்டு வருகிறேன்.

என் மகளின் professor (HOD) என்னை மதிய உணவுக்கு அழைத்து என் மகளின் எதிர்காலம் பற்றிப் பேசியது கல்லூரி மாணவர்கள் மேல் ஆசிரியர்களுக்கு உள்ள ஈடுப்பாட்டினைக் காட்டியது. நான் என் மகளின் முன்னாள் மேனேஜரையும் சந்தித்தேன். அவரும் என் மகளுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதைப் பற்றி என்னுடன் பேசினார்.

விருந்தினரகாச் சென்று வந்ததினால் எனக்குப் பொறுப்பு அதிகம் இல்லை. ஆயினும் நான் தங்கியது என் பிள்ளைகள் வீட்டில் என்பதால் அவர்கள் பொறுப்புடன் இல்லாத விஷயங்களில் நான் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனாலும் அது சுகமான சுமை தான். பொதுவில் அமேரிக்கா நான் 22 வருடங்கள் முன் இருந்ததை விட பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்தியர்களுக்குத் தேவையான அனைத்தும் இப்பொழுது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. ஒரு இந்தியத் திருமணத்தையே ரொம்ப எளிமையாக இப்பொழுது அங்கே நடத்தி விட  முடியும். கோவில்கள் அத்தனை அருமை பெருமையாக உள்ளன! கீழே LAயில் உள்ள மாலிபு சிவா விஷ்ணு கோவில் புகைப்படம்.

malibu temple

இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் வரைக்கும் அமெரிக்கா சொர்க்க பூமி. மிகவும் பிரயாசைப்பட்டு மெனக்கெட்டு திரும்பி வரவேண்டும் என்று உள்ளப் பூர்வமாக நினைப்பவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பி வருவர். உடல் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் யார் தயவும் அங்கு தேவை இல்லை. அதனால் உறவினர்கள் தேவை தெரிவதில்லை. மேலும் உறவினர்கள் இடத்தை நண்பர்கள நிரப்பிவிடுகின்றனர். நண்பர்களிடம் இன்னும் மனத்தில் பட்டதை சொல்லும் சுதந்திரமும் உள்ளது. அதனால் உறவினர்கள் பிடுங்கல் இல்லாமல் அங்கு வாழ்வது பலருக்கு வசதியாகவே உள்ளது. மேலும் நிறைய குடும்பங்களில் சகோதர சகோதரிகள் அனைவருமே அங்குக் குடிபெயர்ந்து இருப்பதால் இந்தியா எப்போதேனும் ஒரு முறை வந்து சென்றாலே பலருக்குப் போதுமானதாக உள்ளது.

அங்கு பிறந்து வளரும் குழந்தைகள் அமெரிக்கர்கள் தான், சந்தேகமே இல்லை. நிறமும் சாயலும் இந்தியன் என்று சொல்லும் அவ்வளவே. அவர்களின் எண்ணங்கள் அந்த நாட்டுப் பண்பாட்டை ஒத்தே இருக்கிறது.

நான் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நாள் வந்ததும் மகளை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் தலைத் தூக்கியது.  சியாட்டிலில் இருந்துக் கிளம்பும் போதும் இதே வருத்தம் இருந்தது.

A parent must learn to cut the apron strings at the right time to let the children grow independently, no matter how much it hurts. பகவத் கீதையும் அதைத் தான் சொல்கிறது. பாதையை வகுத்துக் கொடுத்தப் பின் அவரவர் வாழ்க்கை அவரவர் தான் வாழவேண்டும்.

சிங்கம் 2 – திரை விமர்சனம்.

singam-2

ஆரம்பமே நிலா அது வானத்து மேலே மாதிரி கடலில் ஓடும் படகில் அஜால் குஜால் பாட்டோடு படம் ஆரம்பிக்கிறது. குயிலி ரோலில் அஞ்சலி, ஜனகராஜ் ரோலில் சூர்யா!

சிங்கம் 2வுக்கு, சிங்கம் படத்தோடு நல்ல continuity உள்ளது. பழைய கதாப்பாத்திரங்களுக்கு அதே நடிகர்கள். புதுசா சந்தானம். முதல் சில சீன்களில் அவர் நகைச்சுவை என்ற எண்ணத்தோடு சொல்லும் டயலாகுகளும் செய்யும் சேட்டைகளும் சிரிப்பை வரவழைக்க மறுக்கின்றன. அப்புறம் நாமே வலுக்கட்டாயமாக சிரிக்கப் பழகிக் கொள்கிறோம். ஹன்சிகா இன்னொரு புது வரவு. கொடுத்த ரோலை நன்றாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா ரொம்ப நேரம் வரவேயில்லை. வந்த பிறகும் ஒரு விசனப் பார்வையுடனும் ஓரிரு டூயட் பாடல்களுடன் தன் பங்கை முடித்துக் கொண்டு விடுகிறார். சூர்யா “சிங்கம் டான்சில்” விஜய் நடனத்தில் செய்யும் ஸ்டெப்சுகளை செய்யப் பார்த்திருக்கிறார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் ஆனால் விஜயின் ஸ்டைல் and ease வரவில்லை.

சூர்யா படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல உழைப்பு. போலிஸ் ரோலுக்குத் தேவையான மிடுக்கும் கம்பீரமும் உடல் மொழியும் நன்கு உள்ளது. James Bond மாதிரி துரைசிங்கம் பாத்திரத்தை iconic ஆக செய்து விடலாம். 60 கிலோ எடையுள்ள அவர் 120 கிலோவில் உள்ள 10 வில்லன்களை ஒரே சமயத்தில் சரமாரியாகப் பந்தாடுவதில் இருந்து, எதிராளி வீசும் அரிவாளின் நுணி கூட தன் மேல் படாமல் சண்டையிடும் லாவகத்திலேயும், வில்லன் துப்பாக்கியில் இருந்து வரும் ஒரு குண்டு கூட தன்னை உரசிச் செல்லாத அளவு பறந்து பறந்து சண்டையிடுவதிலும், போலிஸ் அதிகாரியாக முழுப் பவருடன் வேற்று நாட்டுக்குச் சென்று வில்லனை வீழ்த்திப் பிடித்துக் கொண்டு வருவதிலும் ஆகட்டும் நமக்கு தமிழ் James Bondஐ ஹரி உருவாக்கிக் கொடுத்திருக்கார்.

சிங்கத்தின் கதைக் கரு ஆள் கடத்தல் செய்யும் வில்லனை அழிப்பது. சிங்கம் 2 கதையின் கரு போதைப் பொருள் கடத்தல் செய்யும் சர்வதேச தாதாவையும் அவனின் கூட்டாளிகளான உள்ளூர் தாதாக்களையும் பிடித்து வெற்றி காண்பது. யப்பா, என்னா சண்டை! இதில் DSP யின் பின்னணி இசை வேறு. காது ஜவ்வு கிழிந்து விட்டது. சிங்கம் படத்தின் தொடர்ச்சி என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கடவில்லை. பழைய படத்தின் டியூனே போதும் என்று நினைத்துவிட்டார். ஆதலால் அதுவே தொடர்ந்து வருகிறது.

இந்தப் படத்தில் ரகுமான் ஒரு வில்லன், மலையாளத் தமிழ் பேச்சு அங்கங்கு எட்டிப் பார்க்கிறது. முகேஷ் ஹரி இன்னொரு வில்லன். டேனி சபானி சர்வதேச வில்லன். விவேக் இருக்கிறார். முதல் பாராவில் சொன்னா மாதிரி போன படத்தில் இருந்த அனைவரும் இருக்கின்றனர். சுமித்ரா விக்கும்(wig) ராதா ரவி விக்கும் கண்ணை உறுத்துகின்றன.

100% மசாலா படம். ஹரி படமானதால் விறுவிறுவென்று நகருகிறதுத் திரைக்கதை. ஒளிப்பதிவு – பிரியன், ரொம்ப அருமை. ஆனால் படம் பார்த்தப் பின் ஆயாசமாக  உள்ளது.