இரண்டாம் உலகம் – திரை விமர்சனம்

irandaamulagam

படம் ஆரம்பிக்கும் முன் வந்த செர்டிபிகேடில் படம் ஓடும் நேரம் 2 மணி 40 நிமிடம் என்றிருந்தது. அதற்குள் ட்விட்டரில் ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்திருந்ததால், ஐயோ இரண்டே முக்கால் மணி நேரமா என்று நினைத்தேன். உண்மையில் நேரம் போனதே தெரியவில்லை 🙂 இரண்டு உலகக் கதைகள். துளிக் கூட confusionஏ இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை. The existence of a Parallel Universe is the premise to this story. கதை அம்சத்தோடு கூடிய Fantasy. Hats off to you Selva! புத்திசாலித்தனமாக எடுத்திருக்கிறார் செல்வராகவன். எனக்கு அவரின் படைப்புகள் மேல் தனி ஈர்ப்புக் கிடையாது. 7G ரெயின்போ காலனியோ, ஆயிரத்தில் ஒருவனோ எனக்குப் பிடித்தமானப் படங்கள் இல்லை. ஆனால் இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. எல்லா இயக்குநர்களும் படம் ஆரம்பிக்கும்போது புதுவிதமானக் கதை என்று தான் விளம்பரப் படுத்துவார்கள், ஆனால் உண்மையிலேயே இதுப் புதுப் பணியாரம் தான்!

ஆர்யாவும் அனுஷ்காவும் பாத்திரங்களை நன்குணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆர்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள். இலகுவாகச் செய்திருக்கிறார். 6 pack வைத்துள்ளார். அனுஷ்கா படம் முழுக்க அழகாக வருகிறார். நடிப்புக்கும் குறைவில்லை. Computer Graphics படத்தோடு இணைந்திருக்கிறது. சமீபத்தில் வந்தப் படங்களில் குளிர்ச்சியான CGஐ இந்தப் படத்தில் தான் பார்த்தேன். இரண்டாம் உலகில் இயற்கை எழிலோடு CGயும் சேர்ந்து ஒரு மாய உலகத் தோற்றத்தைத் தருகிறது. பிரேசிலிலும் ஜியார்ஜியாவிலும் (வெஸ்டேர்ன் ஏசியா) கடுங்குளிரில் படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. Cinematography (Ramji) உலகத் தரத்தில் உள்ளது!

இரண்டு ஆர்யா இரண்டு அனுஷ்கா, சில similarities மட்டும் வைத்து கதையை லாவகமாக கையாண்டுள்ளார். Not easy. கதையில் தொய்வே இல்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். விரசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, கடுப்படிக்கும் சந்தான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லை. செல்வா நிறைய research செய்திருக்கிறார், முக்கியமாக இந்த உலகத்தில் வாழும் ஆர்யாவின் தந்தை ஸ்கூட்டரில் வரும் காட்சியும், நாய் வரும் காட்சியும் உள்ளர்த்தம் வாய்ந்தவை.

இரண்டாம் உலகம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரண்டு இசையமைப்பாளர்கள். பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் அனிருத், மற்ற பாடல்கள் ஹாரிஸ். பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் பின்னணி இசை தான் படத்தை நல்ல உயரத்துக்கு இட்டுச் செல்கிறது. எனக்கு மேற்கத்திய இசைப் பற்றிய ஞானம் கிடையாது. அதனால் அனிருத் இங்கிருந்து மெட்டெடுத்தார், அங்கிருந்து மெட்டெடுத்தார் என்று இசை அறிஞர்கள் குறை கூறலாம். ஆனால் திரையில் வரும் காட்சிகளுக்குப் பின்னணி இசை பிரமாதமாக உயிரூட்டுகிறது. அவர் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். Symphony இசை காதுக்கும் இனிமை!

செல்வா படத்தில் லக்குகாக தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு சூப் சாங் தான், நன்றாக உள்ளது 🙂 படத்தில் வரும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

இது ஒரு காதல் கதையல்ல, இரு காதல் கதைகள். I am a sucker for love stories and when it is well told how can I not but appreciate and enjoy it! படத்தில் காதல் அரும்பும் போது என் கண்களிலும் சிறு துளி நீர் அரும்பியது. அது செல்வாவுக்குக் கிடைத்த வெற்றி 🙂

பீட்சா 2 – வில்லா – திரை விமர்சனம்

villa

தமிழ் சினிமா ரசிகர்களை அறிவாளிகள் என்று நிச்சயமாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் வில்லா. அதற்கு இயக்குநருக்கு ஒரு பாராட்டு! நிறைய ஆராய்ச்சி செய்து திரைக்கதையிலும்  கவனம் செலுத்திப் படத்தை எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் தீபன் சக்கிரவர்த்தி. பீட்சா 2 என்று பெயர் வைத்தாலும் பிட்சா படத்தின் தொடர்ச்சி அல்ல இந்தப் படம். படம் ஓடும் நேரம் ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். ஆனாலும் முதல் பாதியில் சுவாரசியம் அதிகம் இல்லை. அடுத்த பாதி அந்தக் குறையை சரி செய்து விடுகிறது.

சூது கவ்வும் படத்தில் நடித்த அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி தான் படத்தின் நாயகன், நாயகி. அசோக் செல்வன் நன்றாக நடித்திருந்தாலும் படம் முழுக்க ஒரு சீரியஸ் எக்ஸ்பரஷனோடே வருவதைத் தவிர்த்திருக்கலாம். சஞ்சிதா ஷெட்டி கொடுத்தப் பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.

படம் முழுக்க புதுச்சேரியில். கட்டடங்களும் கடற்கரையும் அழகு. தீபக் குமாரின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் நன்றாக உள்ளது. படத்தின் பலம் பின்னணி இசை. அதை சந்தோஷ் நாராயணன் செவ்வனே செய்திருக்கிறார். ஆனால் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவேயில்லை.

த்ரில்லர் கதை. எப்பவும் போல ஏழை ஹீரோ பணக்காரப் பெண்ணைக் காதலித்து, தாதா, அடிதடி, என்று அரைத்த மாவையே அரைக்காமல் புதுக் கதையை எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் திகில் நிறைந்ததாக சீட்டின் நுணியில் உட்கார்ந்துப் பார்க்கும்படியானக் கதை இல்லை என்பது கொஞ்சம் வருத்தமே.

நாசர் சின்ன ரோலில் வருகிறார். S.J.சூர்யா கேமியோ பாத்திரத்தில் வருகிறார். இயக்குநர், கதை, ஹீரோ இவர்கள் தோள்களில் படம் தூக்கிச் செல்லப்படுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் கிளாஸ் ஆனால் சற்றே காம்ப்ளெக்ஸ். கொஞ்சம் புரிந்து கொள்ள மெனக்கட வேண்டும். படம் க்ரிஸ்பாக உள்ளது.

ஆரம்பம் – திரை விமர்சனம்

ajith-arrambam-posters21379486882

ஒரு ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது. நல்ல வேகமான திரைக்கதை. நான் கமலாவில் பார்த்தேன், திரையரங்கில் பயங்கர டை ஹார்ட் அஜித் fans. அஜித் திரையில் வந்தவுடனே கரகோஷம். உண்மையிலேயே அஜித் ரொம்ப ஸ்டைலிஷாகத் தான் இருக்கிறார். He carries himself very well. விஜய்க்கு எப்படி நடனம் மிகப் பெரிய ப்ளஸ்ஸோ அதே மாதிரி அஜித்துக்கு அவரின் ஸ்டைல் அவரின் பலம்.

ஒரே மாதிரி கதை இந்தப் படத்தின் பலவீனம். பில்லாவா, மங்காத்தாவா, ஆரம்பமா என்று பார்க்கும்போதே ஒரே கன்பீஷன்! அதே கெட்ட கம் நல்ல கேரக்டர் அஜித்துக்கு. ஆனால் கொடுத்தப் பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம், அசத்தல்! நயன்தாராவும் தூள் கிளப்பியுள்ளார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. அனாயாசமாகச் செய்துள்ளார். தாப்சி இளைத்திருக்கிறார், அதனாலோ என்னவோ ஆடுகளத்தில் இருந்த சார்ம் இதில் இல்லை. மேலும் as usual ஜெனிலியா மாதிரி ஒரு லூசு கேரக்டரில் வருகிறார். தமிழ் படங்களுக்கே உள்ள கேடு போலும் அது. இந்தமாதிரி பெண் பாத்திரம் வைத்தால் தான் படங்களில் எடுபடும் என்று இயக்குநர்கள் நினைப்பது ஒரு சாபமே. ஆரியாவுக்கும் ஒரு செகண்டரி ரோல். அவர் பேச்சும் செய்கையும் படத்துக்குப் படம் ஒரே மாதிரி உள்ளது. மிர்ச்சி சிவாவை ஒரே மாதிரி நடிக்கிறார் என்று சொல்லுகிறோம், ஆர்யாவும் அதே கேட்டகிரி தான். அனால் அஜித்துடன் சேர்ந்து நடிப்பதில் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் and good chemistry between the two.

லொகேஷன்கள் மும்பை, துபாய், லே, லடாக், என்று இருப்பதால் ஒளிப்பதிவில் ஓம் பிரகாஷ் பின்னுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது. விஷ்ணுவர்த்தனும் சுபாவும் வசனம். சில இடங்களில் பளிச். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் ஷார்ப்! படத்தின் விறுவிறுப்பு எடிடிங்கினால் தான். கலை லால்குடி இளையராஜா. செட்ஸ் நன்றாக உள்ளது. ஆர்யா வீடு, மற்றும் பல பங்களாக்கள் கனஜோர்! உடைகள் அனு வர்தன். பில்லா அளவு எனக்கு இதில் இம்ப்ரெஸ் ஆகவில்லை.

எப்பவும் போல ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ஒரு பெரிய வெளிநாட்டு வங்கியின் செர்வர் ரூமுக்கு ஒரு கடைக்குள் நுழைந்து வெளியே வருவது போல சுளுவாக நுழைந்து வெளிவருகிறார்கள். இது போலப் பல. ஆனால் பல ஆங்கிலப் படங்களிலும் இது போலத்தான் உள்ளது. அதனால் அதிகம் கேள்விக் கேட்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

ஆனால் ஆர்மி ஆபிசர்களும் போலிஸ் அதிகாரிகளும் செய்யும் சேவைகளும் அவர்களின் பாதுகாப்புப் பற்றியது தான் இந்தக் கதையின் கரு என்று பார்க்கும் போது போற்றத் தக்கக் கதை தான்.

அஜித் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும், மற்றவர்களுக்கு சுமாராகப் பிடிக்கும் 🙂