மாசு – திரை விமர்சனம்

maas

இதை இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று ட்விட்டரில் ஒரு சொலவடை உண்டு. அது போல இதை பேய்ப் படம் என்றால் குழந்தை கூட நம்பாது.

சூரியா இரட்டை வேடம். பேய்களுக்கு வயதாகாது என்று ஒரு நம்பிக்கை போல. அதனால் ஒருவர் இறந்த போது என்ன வயதோ அதே வயதில் பேய்கள் இருப்பதால் ரெண்டு சூரியாவும் இளைஞர்களே! அதை யோசித்த assistant டைரெக்டருக்கு ஒரு ஷொட்டு. அட்லீஸ்ட் வாரணமாயிரம் அப்பா சூரியாவைப் போல ஓல்ட் கெட்டப்பில் பார்ப்பதை தவிர்க்கிறோம்!

நிறைவேறாத ஆசையில் இறந்தவர்கள் ஆவியாக உலாத்துவார்கள் என்ற அடிப்படையில் கதையை எழுத ஆரம்பித்தக் கதாசிரியர், எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்பது மட்டும் அல்ல எப்படி கதையை இரண்டரை மணி நேரத்துக்கு இழுத்துச் செல்வது என்பது கூடத் தெரியாமல் திரு திரு என்று விழித்து நம்மையும் தலை சுத்தி உட்கார வைத்து விடுகிறார்.

பிரேம்ஜிக்கு யாராவது இசை அமைக்கவோ இசை arranger பணியோ கொடுத்தால் புண்ணியமா போகும். நடிப்பதை நிறுத்தி விடுவார். எவ்வளவோ செஞ்சிருக்கீங்க பிரேம்ஜி! நடிப்பதில் இருந்து VRS வாங்கி அந்த நல்லதையும் செஞ்சிடுங்க!

வெங்கட் பிரபு பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நான் அவருக்கு செய்யும் பெரும் உபகாரம்.

நகைச்சுவை மருந்துக்கும் கிடையாது. பேய்கள் பண்ணும் சேஷ்டைகள் காமெடி கணக்கில் வரும் என்று வெங்கட் பிரபு நினைத்திருப்பார் போல. சூரியாவுக்குப் படத்துக்குப் படம் அதே மேனரிசம். ஷர்ட்டை பின் பக்கம் தள்ளி விட்டுக் கொள்வது, “நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லியே ஆகணும்” மாதிரி அதே டயலாக் டெலிவரி, பார்த்து அலுத்து விடுகிறது. அப்போ நாங்களும் சொல்லுவோம் இல்ல, “என்ன கொடுமை சரவணன் இது” என்று! (சூரியாவின் இயற்பெயர் சரவணன் என்பது இங்கே நச்சுன்னு பொருந்துது).

க்ளைமேக்ஸில் ஒரே குண்டில் அழகா வில்லனைக் க்ளோஸ் பண்ணியிருக்க முடியும். ஆனால் performance பண்ண முடியாமல் அது என்ன க்ளைமேக்ஸ் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை, சூரியா சும்மா கயற்றில் தொங்கி பறந்து பறந்து அடிக்கிறார்!

யுவன் ஷங்கர் ராஜா இசை. சித்தப்பா பிள்ளை என்று தனி அக்கறை ஏதும் காட்டி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே இரைச்சல். ஐயா கொஞ்சம் practice செய்து formக்கு வாருங்கள். உங்கள் ரசிகர்கள் waiting for you.

நயன்தாராவுக்கு இந்தப் படத்தில் வயது தெரிகிறது. மேக்கப்பில் கவனம் தேவை. ஆனால் ஒன்று சொல்லியே ஆக வேண்டும் 🙂 சூரியா மிகவும் இளமையாக அழகாக இருக்கிறார். ஆனால் பொதுவாக படங்களில் நடனத்தில் ஸ்கோர் செய்கிறவர் இந்தப் படத்தில் பேய்களோடு டேன்ஸ் etcவில் புதிதாக ஏதும் சிரமப்பட்டு நடன அசைவுகள் செய்யவில்லை. அவருடைய அயன், ஆதவன் அஞ்சான் ஸ்டெப்ஸ்களே திரும்பத் திரும்ப ஆடுவது போல ஒரு தோற்றம்.

ஒரு சூரியா சிலோன் தமிழராக வருகிறார். கேனடா, இங்கிலாந்து வாழ் தமிழர்களை கவர் செய்வதற்காக இருக்கலாம். கதைக்கு எந்த விதத்திலும் அது வலு சேர்க்கவில்லை.

சூரியா உங்களுக்கு நிறைய திறமை, வாய்ப்பு, அழகு, அறிவு, வயது, சினிமா பின்புலம் எல்லாம் அமைந்துள்ளது. நடிப்புலகில் சிலருக்கே இந்த மாதிரி அமையும். அடுத்தப் படத்தில் நல்ல கதையையும் இயக்குநரையும் தேர்ந்தெடுத்து சிறந்த ஒரு படத்தை எங்களுக்குத் தர வேண்டுகிறேன். இப்படியே தொடர்ந்தால் உங்கள் fan baseம் வியாபார அந்தஸ்தும் குறைந்துவிடும்.

maasi

36 வயதினிலே – திரை விமர்சனம்

36vayathinile

சமீபத்தில் பார்த்தப் படங்கள் எல்லாம் இரண்டே முக்கால் மூணு மணிநேர படங்கள், இந்தப் படம் இரண்டு மணி நேரத்துக்கும் கம்மி என்று சென்சார் சான்றிதழ் பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. ஆனால் படம் முடியும் போது ஷ்ஷ்ப்பா இரண்டு மணி நேரமே தாங்கலையே சாமி என்றிருந்தது!

ஜோதிகாவுக்கு perfect come back படம் இது. அவர் வயதுக்கு, அனுபவத்துக்கு, தகுதிக்கு சூப்பர் பொருத்தம்! சிக்ஸர் பவுண்டரின்னு சீனுக்கு சீன் அனாயாசமாக ஸ்கோர் பண்ணியுள்ளார். படம் முழுவதும் சிம்பிளான உடை, நகை. துளி கிளேமர் கிடையாது. ஆபிஸ், வீடு, இதர இடங்கள் அனைத்தும் கச்சிதமான செட் டிசைன்.

டெல்லி கணேஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவ தர்ஷினி, இளவரசு, அபிராமி போன்றோர்கள் செகண்ட் டேக் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. யாரும் எங்கும் சோடை போகவில்லை. மகளாக நடித்திருக்கும் பெண் ரொம்ப அழகாக செய்திருக்கிறார்.

சொதப்பல் ரகுமான் கதாபாத்திரத்தில் ஆரம்பிக்கிறது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனின் ஆதங்கங்கள் எல்லாரும் அறிவார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் மனைவியிடம் வெறுப்புடன் பழகுவதற்கு வலுவான/நம்பகத்தன்மை உடைய காரணம் இல்லாததால் கதையின் ஓட்டத்தையும் நாம் படத்தோடு ஒன்றுவதையும் தடை செய்கிறது. வில்லனைப் போல காட்டாமல் இன்னும் யதார்த்தமாகச் சித்தரித்திருக்கலாம்.

அதே போல ஜோதிகாவிற்கு இயற்கை வேளாண்மையில் முதலில் ஈடுபாடு எப்படி வந்தது என்று சொல்லியிருந்தால் கதை இன்னும் நேர்மையாக இருந்திருக்கும். இயற்கை வேளாண்மை தான் படத்தின் அடி நாதம். மேலும் இயற்கை வேளாண்மையின் தந்தை நம்மாழ்வாரைப் பற்றி கண்டிப்பாக ஓரிரு வார்த்தைகளாவது ஜோதிகா பாத்திரத்தின் மூலம் சொல்லியிருக்க வேண்டும்.

இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ள FaceBook பற்றிய காட்சிகள் ரொம்ப செயற்கையாக உள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசை “வாடி ராஜாத்தி” தவிர எடுபடவில்லை. நடனம், சண்டை காட்சிகள் எதுவும் கிடையாது. நகைச்சுவைக்குத் தனி டிரேக் இல்லை. கதையோடு பின்னி வருகிறா மாதிரி நகைச்சுவை காட்சிகளும் கிடையாது. Flash backல் ஜோதிகா கல்லூரி மாணவியாக வரும் சீனில் இன்னும் கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அரங்கத்தில் நிறைய பெண்கள். பெண் சுதந்திரத்தை/கனவை பறிக்க பெண்கள் அனுமதி தரக் கூடாது என்பது கதையின் கரு. ரொம்ப அடிமை வாழ்வுடன், கணவனால், பிள்ளைகளினால் ஏளனப்படுத்தப் பட்டவர்கள் ஜோதிகாவின் கேரக்டருடன் தங்களை identify பண்ணி முடிவில் inspiration பெறலாம். மற்றவர்களுக்கு இப்படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கடைசியில் கூட மகள் புரிந்து கொண்ட அளவு கணவன் தன் அணுகுமுறையில் என்ன தவறு இருந்தது என்று புரிந்து கொண்ட மாதிரி கதையில் காட்டவில்லை. Low budget படம். ரீமேக், அதே இயக்குநர் – கடகடன்னு எடுத்துட்டாங்க. அதனால் சூர்யாவின் முதல் தயாரிப்பு இலாபத்தையே தரும்.

36vayathinile1

உத்தம வில்லன் – திரை விமர்சனம்

 

uv2

இப்போ அப்போ என்று கண்ணாமூச்சி காட்டி விளையாடிய உத்தம வில்லன் இன்று 3மணி ஆட்டத்திற்கு வெளிச்சத்துக்கு வந்தார். கமல் படம் என்றாலே ஹைப் அதிகம் தான். அதிலும் அவர் குருநாதர் கேபியுடன் என்னும் போது கூடுதல் எதிர்ப்பார்ப்பு!

நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் கமலஹாசன். அதுவும் இப்படத்தில் அவர் பாத்திரம் very close to his real life. இப்பட நாயகன் மனோரஞ்சனுக்கும் கமலஹாசனுக்கும் நிறைய parallel உள்ளது. அதனால் இப்படத்தைப் பார்க்கும்போது அவரைப் பற்றிய ஒரு பயோபிக் ( biopic) மாதிரியும் உணர்வதை தடுக்க முடியவில்லை.

நான் தான் சகலகலா வல்லவன் என்று அவர் அன்று பாடியது இன்று இப்படத்துக்குத் தான் மிகவும் பொருந்தும். அனாயாசமாக உணர்ச்சிகளைக் கொட்டுகிறார், பாடுகிறார், பல நடன வகைகளை நளினமாக ஆடுகிறார். கதை, திரைக் கதை வசனமும் அவரே! இயக்கம் ரமேஷ் அரவிந்த் என்று வந்தாலும் படம் முழுக்கக் கமலஹாசனே வியாபித்து இருப்பதால் இயக்கத்தை ரமேஷ் அரவிந்த் செய்திருப்பாரா அல்லது அவர் இயக்க ஏதாவது இருந்திருக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

கேபியை மிகவும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார் கமல். முன்பு பொய் என்று ஒரு படம் அவர் நடிப்பில் வந்தது. மிகப் பெரிய disappointment அது. அதனால் இந்தப் படத்தில் பாலச்சந்தர் எப்படி செய்திருப்பாரோ என்று கொஞ்சம் அச்சமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அற்புதமாக நடித்திருகிறார். எப்படி இந்தப் படத்தில் கமல் almost தன் வாழ்க்கையைத் திரையில் வாழ்ந்திருக்கிறாரோ அதே போலத் தான் கேபியும் அவர் வாழ்க்கையை மார்க்கதரிசியாக வாழ்ந்திருக்கிறார்.

ஊர்வசி, K.விஸ்வநாத், இருவருக்கும் சின்ன சின்னப் பாத்திரங்கள் தான். ஆனால் பொருத்தமானப் பாத்திரத் தேர்வுகள். K. விஸ்வநாத் விக்ரமுடன் ராஜபாட்டை என்றொரு படத்தில் சிறிதும் பொருந்தா ஒரு ரோலில் நடித்திருப்பார். இதில் கம்பீரமாக வருகிறார்.

ஸ்பெஷல் மென்ஷன் to M.S.பாஸ்கர். எப்படி தேவர் மகனில் வடிவேலுவுக்கு மனத்தில் நிற்கும்படியான ஒரு பாத்திரம் அமைந்ததோ அது மாதிரி மிகவும் லேட்டானாலும் லேடஸ்டாக எம்.எஸ்.பாஸ்கருக்கு நினைவில் நிற்கும் சொக்கு செட்டியார் பாத்திரம் அமைந்துள்ளது. நடிகனின் மேனேஜராக வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.

கமல் படங்களின் செட் ப்ராபெர்டிகளான ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் ஒகே. அதில் பூஜா பெட்டர், நடிப்பில் செயற்கை தன்மை இருப்பினும், நடனத்தில் ஸ்கோர் செய்கிறார். இன்னொரு கமல் பட ஆஸ்தான நடிகரான ஜெயராமன் மென்மையான நடிப்பில் மிளிர்கிறார்.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் இசை. ஜிப்ரான் பூந்து விளையாடி இருக்கார். பின்னணி இசை and பாடல்கள் இரண்டும் நன்று. ஒரு சின்ன ரோலில் வந்து போகிறார், அதே போல கு. ஞானசம்பந்தமும். இருவருக்கும் பதில் வேறு எவரேனும் வந்திருக்கலாம்.

இனி படத்தின் தொய்வுக்கானக் காரணத்தைப் பார்ப்போம். கதைக்குள் கதையாக வரும் கதை தான் இழுவை. படத்தில் பாலச்சந்தரே எந்தப் படத்துக்கும் கதை தான் முக்கியம் என்று ஒரு டயலாக் சொல்கிறார். பிறகு அத்தனை பெரிய நடிகரை ஒரு குழந்தைகள் கதை பட ரேஞ்சில் அவரே இயக்குவது விந்தையாக உள்ளது. சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு எதுக்கு? எடிட்டிங் டேபிளில் அதன் தொடர்ச்சி கட் ஆகிவிட்டதோ? முழுதாகவே கட் பண்ணியிருக்கலாமே. நாசர் என்றொரு நல்ல நடிகரை இப்படி வீணடித்திருக்க வேண்டாம் கமல்! கதைக்குள் கதையில் அவர் வருவதால் வரும் சோகம் இது. அதில் எந்தப் பாத்திரத்தில் யார் வந்தாலும் சோபிக்காமல் போய் விடுகின்றனர்.

படத்தின் கரு சாகாவரம். அதற்கு இரண்டாம் கதை இல்லாமலே இன்னும் அழகான ஒரு திரைக்கதையை இயற்றி இருக்கலாம். படத்தில் பிராமணர்களைக் காட்டும் ஒரு காட்சி வருகிறது. மிக மிக அனாவசியமானக் காட்சி. கமலுக்கு அப்படிக் காட்டுவதில் எதோ கிக் வருகிறது என்று நினைக்கிறேன்.

படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது ஒரு மகிழ்ச்சி.

Overdose of கமல் இப்படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்.  அதன் குறைகளுடனே எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. பல இடங்களில் நெகிழ்ச்சி, கண்களைத் துடைத்துக் கொள்ளும் அளவுக்கு 🙂

uv3