ஐ’ய்யோ பாட்டி

grandma1

வீடு பரபரத்துக் கொண்டிருந்தது. பாட்டி பாத் ரூமுக்குள் போய் இருபது நிமிஷத்துக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் வெளியே வரவில்லை.

இதற்கு நடுவில் ஆகாஷ் ‘mom, where is the iPad? I am so bored, I want to play’என்று விநோதினியை நச்சரித்துக் கொண்டிருந்தான்.

அவளோ. ‘Great grandma is locked up in the bathroom. உனக்கு iPadஐ எல்லாம் என்னால் இப்போ எடுத்துத் தர முடியாது’ என்றாள் எரிச்சலாக.

‘உள்ளே போய் இத்தனை நேரம் ஆச்சே, ஒரு சத்தத்தையும் காணோம்’ என்றபடி அவளின் மாமனார் கதிரேசன் தட தடவென்று குளியல் அறைக் கதவைத் தட்டினார்.

‘அப்பா, பாட்டியை பாத்ரூம் போகும்போது கதவை பூட்டக் கூடாதுன்னு சொல்லலையா?’ என்றான் மகன் கார்த்திக், அவன் பங்குக்கு.

‘எவ்ளோ தடவை சொல்லியாச்சுடா, பாட்டிக்கு ரொம்ப மறதி, உள்ள பூட்டிகிட்டு இருக்குறது எத்தன வருசப் பழக்கம் அவங்களுக்கு’ என்றாள் அவன் அம்மா தனலட்சுமி கவலையுடன்.

ரெண்டு நாள் முன்பு தான் குடும்பத்தோடு கார்த்திக் அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கியிருந்தான். பாட்டிக்கு இவனை பார்த்ததை விட கொள்ளுப் பேரனை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். எண்பத்தி எட்டு வயது, ஆனால் கண், காது, மூளை அனைத்தும் கூர்மையாக வேலை செய்தன. கொள்ளுப் பேரனை விட்டு நகராமல் கொஞ்சிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தாங்க.  பாட்டி தமிழில் கேள்வி கேட்க கொள்ளுப் பேரன் ஆங்கிலத்தில் பதில் சொல்ல பாட்டி அவனை ஆணைத்துக் கொண்டு ஒரே முத்த மழை தான். இன்று இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வாட்ச்மான் செல்வத்தை கனகராஜ் உதவிக்குக் கூப்பிட, அவன் யாரையோ தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தான். ‘சார் இவர் பூட்டை நல்லா திறப்பார்’ என்றான். வந்த ஆள் கதவின் கைப்பிடியை இப்படி அப்படி ஆட்டி, ‘இல்லை சார் லாக் ஆனா மாதிரி தெரியலை, அவங்க தாப்பாள் தான் போட்டிருக்கணும்’

‘கடவுளே! திருச்செந்தூர் முருகா! பாட்டிக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாதே’, அம்மா கூப்பிட தொடங்கிவிட்டாள். ‘உள்ளே மயங்கி விழுந்துட்டு உயிரே போயிட்டுதுனா நாளைக்கு எல்லாரும் நம்மளை ஏசுவாங்க! ஏதாவது பண்ணுங்களேன்’ என்று கணவனை உலுக்கினாள் தனலட்சுமி.

‘சார் நான் வேணா பால்கனி வழியா பிடிமானம் ஏதாவது இருக்கான்னு பார்த்து ஏறி பாத்ரூம் வெண்டிலேடர் வழியா எட்டிப் பார்க்கிறேன்’ என்றான் பூட்டு ரிப்பேர் ஆள்.

‘நீ நல்லா இருப்ப, உடனே ஏறி பார்’ அம்மா

‘அம்மா, அதெல்லாம் ரிஸ்கி. அவர் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டார்னா ரொம்பப் பிரச்சினையா போயிடும். We become liable’ என்றான் அமெரிக்கா வாழ் மகன்.

‘அதெல்லாம் ஒன்னியும் பயம் இல்லை சார். குமாரு நீ ஏறி பாருப்பா, அந்த கிழவி எப்படி இருக்கோ’ என்று வாட்ச்மேன் அவசரப்படுத்தினான்.

போன் மணி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது, வினோதினி போனை எடுத்து ‘அத்தை, போனில் விஜயா பெரியம்மா. இப்போ எங்களைப் பார்க்க வரலாமான்னு கேட்கிறாங்க’ என்றாள்.

‘வேறு வினையே வேண்டாம். நாம தான் பாட்டியை பாத்ரூமில் அடச்சு வெச்சுட்டோம்னு கதையே கட்டிவிட்ருவாங்க. வெளில போறோம் அப்புறம் வாங்கன்னு சொல்லு’ அம்மா.

அதற்குள் பக்கத்து வீட்டு பாக்கியராஜ் சத்தம் கேட்டு உள்ளே வந்தார். ‘என்ன பாட்டி உள்ளே மாட்டிக்கிடாங்களா? உடனே பையர் சர்வீசுக்கு போன் பண்ணுங்க. அவங்க வந்து கதவை உடச்சு காப்பாத்திடுவாங்க’ என்றார்.

‘உயரமான ஏணி ஏதாவது இருக்குமா? செல்வம் பக்கத்து flatல பெயின்ட் அடிச்சாங்களே, அங்கே போய் பாரு. ஏணி இருந்தா ஏறி வெண்டிலேட்டரை உடைக்கலாம்.’ என்று இன்னொரு ஐடியா கொடுத்தார். ‘ஏதாவது ஆகியிருந்தா இம்மீடியட்டா முதல் உதவி பண்ணா தான் பொழைக்க வெக்க முடியும்.’

கடக் என்று பாத்ரூம் தாழ்பாள் திறக்கும் ஓசை. எல்லார் கண்களும் பாத்ரூமை பார்க்க பாட்டி நிதானமாக காதில் ஹெட்போன்ஸ் போட்டபடி கையில் ஐபேடுடன் வெளியே வந்தாள். ஆகாஷ், பாட்டி என்று ஓடிப் போய் கட்டிக் கொண்டு அவங்களிடமிருந்து ஐபேடை பிடுங்கினான். ‘இருடா, நான் இன்னும் கேமை முடிக்கலை. முடிச்சுட்டு தரேன்’ என்றார் பாட்டி.

GRANDMOTHER & BABY HANDS

 

பிசாசு – திரை விமர்சனம்

pisasu1

பேய் கதை என்று அதீத பயமும் இல்லை, நம்பகத் தன்மை அற்றும் இல்லை. நிச்சயம் வித்தியாசமானத் திரைக்கதை. ஆரம்பம் முதலே நல்ல விறுவிறுப்பு, அது இறுதி வரை தொடர்வதே படத்தின் வெற்றி. நன்றாக ஆராய்ச்சி செய்து எடுத்துள்ளார் மிஷ்கின்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக செதுக்கியுள்ளார். குறைந்த அளவே பாத்திரங்களை வைத்து நிறைவான ஒரு படத்தைத் தந்த மிஷ்கினுக்கு மனமார்ந்த பாராட்டு. படம் ஓடும் நேரம் இரண்டு மணி தான். அது படத்தின் முக்கியமான பலமாகும்.

இந்த படத்தை உருவாக்கிய மொத்தக குழுவும் சிறப்பாக அமைந்தது தயாரிப்பாளர் பாலாவுக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் அதிர்ஷ்டமே. ஒளிப்பதிவாளர் ரவி ராய் படத்தின் கதையை விஷுவலாக சொல்லிவிடுகிறார். மிஷ்கின் சொல்ல வந்ததை அவர் காட்டிவிடுகிறார். பேய் கதை ஆயினும் படம் வெளிச்சமாகப் படமாக்கப் பட்டுள்ளது 🙂

இசை, புதியவர் Arrol Corelli. அவர் ஒரு வயலினிஸ்ட் என்று கேள்விப்பட்டேன், அதனால் வயலின் இசை படத்தில் தூக்கலாக இருக்கிறது. அனால் வயலின் இசை முன் பாதியில் கதையோட்டத்துக்கு நிச்சயமாக உயிரூட்டுகிறது. வயலின் தெரிந்தவரோ அல்லது படத்துக்காகக் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை, நாயகன் வாசிப்பும் பிரமாதம். படத்தில் முன் பாதியில் அவரின் மன நிலையை பிரதிபலிக்கும் ஒரு melancholy moodஐ அந்த வயலின் இசை கொண்டு வருகிறது.

Editing கோபிநாத். கதையோட்டத்தைப் பாழ் படுத்தாமல் கச்சிதமான எடிடிங். ராதாரவியைத் தவிர நடித்தவர்கள் யாரும் பிரபலமில்லை. ஆனால் அனைவரும் நன்கு நடித்துள்ளனர். பாத்திரங்களின் யதார்த்தத் தன்மையும், அதனால் வரும் நகைச்சுவையும் படத்தை நல்லதொரு entertainment ஆக்கியுள்ளது.

படத்தில் வரும் வீடும், அபார்ட்மென்ட் காம்ப்லெக்சும் அழகாக உள்ளன. ஜெயஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்கிற பெண் தான் கலை இயக்குநர். அவர் கைவண்ணம் மிளிர்கிறது.

அமானுஷியத்திலும் அன்பின் வெளிப்பாட்டை நன்கு காட்டியுள்ள மிஷ்கின், இனி அவர் எடுக்கும் மற்றப் படங்களையும் இவ்வாறு சிறப்புடன் செய்ய வாழ்த்துகள் 🙂

pisasu

லிங்கா – திரை விமர்சனம்

Linga

K.S.ரவிகுமார் திரைக் கதையில் என்றும் சோடை போனதில்லை. அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்து ஸ்கோர் செய்பவர். ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பையும் லிங்காவிலும் பூர்த்தி செய்துள்ளார். நான்கு வருடங்கள் கழித்து ரஜினியை திரையில் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் பீறிடுவது என்னவோ உண்மை தான் 🙂 அது தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெற்று தந்திருக்கிறது.

தாத்தா, பேரன் என்று இரு வேறு பாத்திரத்தில் வருகிறார்.  வேறு வேறு காலக் கட்டம், சேர்ந்து இரு பாத்திரமும் ஒரே frameல் வருவதில்லை. சோனாக்ஷி சின்ஹா ஒருவருக்கும், அனுஷ்கா ஒருவருக்கும் ஜோடி. இரு ஹீரோயின்களுமே ரஜினிக்கு நன்றாக ஜோடி சேர்கிறார்கள். சோனாக்ஷி சின்ஹா தமிழ் படத்திற்கு அறிமுகம். தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி உருட்டலா அழகா இருக்கிறார். ஹிந்தியில் இருந்து இறக்குமதியாக வித்தியாசமாகத் தெரியவில்லை.

கே.எஸ்.ரவிகுமாரின் பலமே ஒரு படத்தை வெகு விரைவில் முடிப்பது தான். அதை இந்தப் படத்திலும் செய்துள்ளார். முக்கியமாக ரஜினி உடல் நலனில்லாமல் இருந்து பெரிய இடைவெளிக்குப் பின் எடுக்கும் படம், இதற்கு முன் இரண்டு படங்கள அவரை வைத்து ஆரம்பித்து நின்று போனதாலும் மிகவும் விரைவாக எடுத்து முடித்துள்ளார். அதுவே இந்தப் படத்தின் பலவீனமாகவும் ஆகிவிட்டது. பாதி படம் பீரியட் படம். அதற்குத் தகுந்தாற்போல authenticகாக செட்டோ மெனக்கெடலோ அவ்வளவாக இல்லை, அவ்வாறு எடுக்க காலம் அதிகம் ஆகியிருக்கும். ஆனாலும் முடிந்தவரை பழுதில்லாமல் படைத்திருக்கிறார்.

ஷங்கர் பட பிரம்மானடத்தை ரவிகுமார் படத்தில் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் இரண்டு டூயட் பாடல்களிலுமே நடனம், செட், வெளிநாட்டு லொகேஷன் ஆகயவை மிகவும் நன்றாக அமைந்துள்ளது. சந்தானத்துடனும் கருணாகரனுடனும் காமெடியில் இயல்பாகக் கலக்கியிருக்கிறார் ரஜினி. படையப்பாவில் நீலாம்பரி சொன்ன “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை” டயலாக் இந்தப் படத்திற்கும் வெகுவாகப் பொருந்துகிறது 🙂

இசை பெரிய let down. இரண்டு பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கின்றன. பின்னணி இசை மட்டும் நன்றாக இருந்திருந்தால் படத்திற்குப் பெரிய வலு சேர்த்திருக்கும்.

ரஜினி முதல் பாதியில் ஒரு பாத்திரத்திலும், இரண்டாவது பாதியில் இன்னொரு பாத்திரத்திலும் கோலொச்சுகிறார்கள். பீரியட் பகுதியில் வரும் ரஜினியின் நடிப்பும் பங்களிப்பும் எனக்கு அதிகம் பிடித்தது. இசை வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு என்னால் முடிந்த வரை ரஜினியை இளமையாகக் காட்ட முயன்று இருக்கிறேன் என்று சொன்னார். அவருக்கும் மேக்கப் கலைஞருக்கும் ஒரு சபாஷ்.

க்ளைமேக்ஸில் ஒளிப்பதிவாளர் வெகு சிறப்பாகப் பணியாற்றி நடுவில் கொஞ்சம் தொய்வுற்றக் கதையை நிமிர்த்தி நிறைவு செய்கிறார். நிறைய துணை நடிகர்களின் பங்களிப்பு உள்ளது. அவர்களை எல்லாம் ஒரு சேர நன்றாகக் காட்டியிருப்பது ஒளிப்பதிவாளரின் சாதனை.

படம் நீளம். கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். மேலும் பின் பாதியில் சில பல காட்சிகள் வெட்டுப் பட்டிருப்பது தெரிகிறது. அதனால் சில இடங்களில் கதை தெளிவாக இல்லை. எடிடிங்கில் கே.எஸ்.ரவிகுமார் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சிறிது சிறிதாகப் பல குறைகள் உள்ளன. ஆனால் மொத்தத்தில் 6 மாதத்தில் படத்தைத் தயாரித்து வெற்றிகரமாக அளித்த இயக்குநரை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

ஆனாலும் ரஜினி இனிமேலும் இந்தமாதிரி படங்களில் நடிக்க வேண்டுமா என்று தீவிரமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அவருக்கான நடன அசைவுகள் மென்மையாக இருக்கின்றன, சுற்றி ஆடுபவர்கள் வேகமாக ஆடி அவரும் அப்படி ஆடுவது போல தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதே போல சண்டை காட்சிகளில் எல்லாம் ஸ்டன்ட் டபுள் தான் அவர் இடத்தை நிரப்புகிறார். மேக்கப்புக்கு நிறைய செலவாகியிருக்கும்.

ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பார்கள்.

linga1

Ayyo Paati!

grandma1

There was so much commotion in the house. The eighty-eight-year-old grandma had got locked herself in the bathroom, and there was no reply to any of the family’s calls in the past twenty minutes. The whole household was worried, and in this tension, Akash was pestering his mom Vinodhini for his iPad.

“Mom, where is my iPad? I am so bored, I want to play a game.”

“Will you stop? Great-grandma is locked inside the bathroom and I cannot be looking for your iPad right now!” replied Vinodhini angrily.

“It’s been so long since she went in.” Her father-in-law Srinivasan banged on the bathroom door again. No reply.

“Dad, haven’t you told her not to lock the bathroom?” asked the vacationing son from the US.

Ashok, Vinodhini and Akash had arrived from the US only a couple of days ago. Great-grandma was so happy to spend time with her great-grandson. They instantly bonded and were soon inseparable except for when Akash slept. It was so cute to watch Akash speak to her in English and her replying to him in Tamil. Now this unfortunate incident!

“Oh we have told her a thousand times. But she has become very forgetful these days,” said Amma in a very worried tone. “It has always been her habit to lock herself in, it’s hard to change.”

“Sir, here is the locksmith you asked for,” said the watchman, bringing with him a guy who seemed to know his business.

“The door has not been locked with the door lock, Sir. The bolt has been used to lock the room, so I cannot help,” he said a little sadly after checking the lock.

“Perumaale, Oppiliyappa, Sri Rama, please save Paati! Hope nothing has happened to her.” Amma started crying in her usual way. “Please do something,” she prodded her husband. “If she dies inside we will never hear the end of it from our relatives.”

The locksmith, being a good soul, said, “Amma, I can see if I can climb out of the balcony and reach out to the bathroom ventilator and see how she is doing.”

“Oh, please do that, I will be ever so grateful to you,” said Mom.

“Amma, what if he slips and falls? We become liable,” said her American son.

“Oh, you don’t worry about all that Sir, we have to help Pattimma before something happens to her. You go and see what you can do” said the watchman to the locksmith.

“What is all the noise I hear?” said the neighbour Ramalingam, entering the house. He quickly assessed the situation. “Oh you should call the fire service immediately. They will have tall ladders, and those strong firemen can break open the door and save Paati.”

Tadak! – A noise from the bathroom, of the latch being opened! Out came Great-grandma with headphones on her head and and iPad in her hand. “Paati!” cried Akash, running up to her, and trying to grab the iPad from her hands.

Iru da, you please wait. I am not done with the game yet!”

GRANDMOTHER & BABY HANDS